
"அடக்க முடியாத வன்முறை வெறியும், அடக்க முடியாத பாலுணர்வுப் பசியும், இருக்கும் வரை மனித இனம் அச்சம் இன்றி முன்னேற முடியாது." - ´ஸிக்மண்ட் ஃபீராய்டு´ [Sigmund Freud] [மனத்தத்துவ ஆராய்ச்சியாளர்.
புணர்ச்சியின் வரம்பற்ற நிலைகளே மனிதனின் இயல்பென்றும், அதுவே நாகரிக மனிதனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்றும், சமூகத்திடம் கட்டுப்பாடுகளை கட்டுடைக்க முற்படும் போது முதல் கட்டுடைப்பு பாலுணர்வுக்கு தடையாக எதுவும் இருக்கக் கூடாது என்பதே. அதுவே மனித நாகரீகத்தின் அந்தஸ்துக் குறியீட்டாகவும் (Status Symbol) சிலர் நினைக்கின்றனர். அதன் வீரியம் எந்தளவுக்கு ஒரு சமூகத்தை தாக்கத்திற்கு உள்ளாக்குகிறது என்பதை அனுபவம் சொல்லும் போது, கோட்பாடுகளை கட்டுடைப்புகள் வரைமுறைக்குள் மீண்டும் கொண்டு வருகிறது; நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் அறநெறி.
வாழ்வில் எழுதப்படாத சட்டங்களாக மனித குலத்தின் மேன்மையை நோக்கி அழைத்துச் செல்லும் அறநெறிக் கோட்பாடுகளுடன் மனிதன் முரண்படும் போதெல்லாம் தோற்றுக் கொண்டே இருக்கின்றான். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சமீபத்தில் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு விதிக்கப்பட்ட தடை..
என்றாயிற்று கலிபோர்னியாவில்?
கலிபோர்னியாவையும், ஓரினச்சேர்க்கையாளர்களையும் பற்றி பேசுவதற்கு முன் மனிதன் என்பவன் யாரென்றும், அவனுடைய செயல்பாடுகளையும் கொஞ்சம் பார்ப்போம்.
"கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் கடற்கரையோரத்தில் ஆழங்குறைந்த நீரில் சூரிய ஒளிக்கதிர்களின் தொடுகை விசேஷத்தால் சில மூலக்கூறுகள் இணைந்து 'புரதத் துகள்' ஒன்று உருவாகிறது. அத்துகல்களில் இருந்த மூலக்கூறுகள் இரண்டாயிற்று, நான்காயிற்று, எட்டாயிற்று..."
இப்படியே அதன் தன்னாற்றல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த தன்னாற்றலில் இருந்தே (உயிரற்ற மூலங்கள்) உயிர் இயக்கம் கொண்ட 'வஸ்து' உருவாகிறது. இந்த புரதப் பிண்டமே "உயிர் வர்க்கத்தின் தொடக்கம்" என்று விஞ்ஞானம் சொல்கிறது.
நீரில் தோன்றிய உயிர்த்துகளே கோடான கோடி ஆண்டுகளுக்கு பின் அமீபாப் பூச்சியாகவும், பின் மீனாக, தவளையாக, பறவையாக, பாலூட்டும் மிருகங்களாக, மனிதனாக பரிணாமம் அடைந்திருக்கிறது.
"விஞ்ஞானத்தில் மனித பரிணாமத்தை குறித்து ஓர் வரைப்படம் உண்டு. அடர்ந்த விருட்சக மரம். அதில் பல கிளைகள். மரத்தை உயிராகவும், அதிலிருந்து தோன்றிய பல கிளைகளில் ஒரு கிளை பூச்சிகள், ஒரு கிளை பறவைகள், மற்றொரு கிளை பாலூட்டும் பிராணிகள், ஒரு கிளை மனித இனம். இப்படி உயிர்கள் அனைத்தும் ஒன்றே என்பதை உணர்த்தும் வரைப்படம்.
"அமீபாப்பூச்சியில் பாக்டீரியாவில் துடிக்கும் உயிரே மனிதனுக்குள்ளும் துடித்துக் கொண்டிருக்கிறது" என்று விஞ்ஞானம் உயிர்தோற்றத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. மனித இனம் எப்போதுமே சோதனை செய்தல், தவறை உணர்தல், மீண்டும் சோதித்தல் என்ற முறையைப் பின்பற்றியே (Trial and error) முன்னேறி வந்துள்ளது. "அமீபா மனிதனின் குளறுபடிகளை"த் தான் நாம் வரலாறுகளாகவும் பார்க்கிறோம். எவ்வளவு நாகரிக வளர்ச்சி அடைந்தாலும் 'அமீபா மனிதனின்´ ஆக்கிரமிப்பாகிய மூர்க்கத்தனத்தை மாற்ற முடியாமல் இருக்கிறது. எங்கே தவறு நடந்திருக்கிறது? வரலாற்றை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த கால எச்சங்களில் எதைச் செய்யக் கூடாது, எதைச் செய்ய வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டுவருகிறோம். அப்படித்தான் ஓரினச்சேர்க்கையையும் ஆராய வேண்டியுள்ளது. "அமீபா மனிதனின் மன வக்கீரங்கள்" காமத்தில் மிருக நிலைக்கும் கீழே போய்விட்டது. ஆதிகால மனிதன் "கற்பு" என்ற சொல்லுக்கு அர்த்தம் உருவகப்படுத்தாத காலகட்டத்தில் உடன் பிறந்த சகோதிரிகளையும், பெற்ற தாயையும், மகனையும், மகளையும் புணர்ந்தார்கள்.
யாச்சோபின் என்ற வரலாற்று ஆய்வாளர் மதம் தோன்றுவதற்கு முன்பு இருந்த சமூக நிகழ்வுகளை, சராசரியாக பண்டைகால மக்களிடம் காணப்பட்ட விசித்திர வழக்கங்களை ஆதரங்களுடன் விளக்குகிறார். ´ஓடின்´ தன் மகள் பிரிக்காவுடன் இணைந்தது வம்ச விருத்திக்காக.
எகிப்திய நாட்டு தேவன் தன் தாயை மணந்ததும், லீசியார், எட்ருஸ் கானர், சிரீட்டர், அத்தீனியர், லெஸ்பெயின்கள், எகிப்தியர்கள் முதலியவர்களுக்குள் பலர் பலருடனும் புணர்ந்து வந்திருக்கின்றனர்.
மதம் தோன்றிய காலகட்டத்தில் பாபிலோன் நகரித்தில் பெண்கள் பருவமடைந்தால் ஏதேனும் ஓர் கிறிஸ்தவ ஆலயத்தில் யாராவது ஓர் ஆணுடன் சேர்க்கையில் ஈடுபட்டு தன்னுடைய கன்னித்தன்மையை அழித்துக் கொள்ளும் சடங்கை புனிதமான மதச்சடங்காக கருதி இருக்கின்றனர்.
மெம்பிஸ், அர்மீனியா, டயர்சி, டோன் - போன்ற பிரதேசங்களிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததாக யாச்சோபின் குறிப்பிடுகிறார்.
லிபியனைச் சேர்ந்த கன்னிப்பெண்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களுடன் இணைந்து திருமணத்திற்கு கொடுக்க வேண்டிய சீதனத்தை சம்பாதித்ததாகவும் காணப்படுகின்றது. யார் அதிகமான சீதனங்கள் வைத்திருக்கிறார்களோ அப்பெண்களையே மணக்க விரும்பி இருக்கின்றனர் ஆண்கள். திருமணத்திற்கு பிறகு மற்ற ஆண்களுடன் சேர்க்கையில் ஈடுபடுவதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. தாரசிய இனத்தினருக்குள்ளும் இவ்வழக்கம் இருந்திருக்கிறது.
எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓர் இளவரசி விபச்சாரத்தில் சேர்த்த பணத்தில் தனக்கென ஒர் பிரமீட் (Pyramid) கட்டியதாக வரலாறுகள் உண்டு.கி.மு 66-இல்
அரேபிய நாட்டில் அண்ணன் தங்கைகளிடம், தாய் மகன்களிடம், புணர்ச்சியில் ஈடுபட்டதாக ´ஸ்ட்டாபோ´ என்ற வரலாற்று அறிஞர் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார்.
வம்ச விருத்திக்காகவும், முறைக்கேடான முறையில் புணர்ச்சிகள் இருந்திருக்கின்றன. பின் ஓரளவு நாகரிகமடைந்த மனிதன் தாயையும், சகோதரியையும், மகளையும் புணர்வது அநாகரிகமானது என தவிர்த்தான். குழுக்களாக சிறு சிறு இனங்களாக திரிந்த மனிதக் கூட்டங்களை அரசாட்சிகள் ஆள ஆரம்பித்த கட்டங்களில் கூட மனிதனின் காமப்பசி வேறு திசைகளில் திருப்பி விடப்பட்டது.
ஆக்கிரமிப்பு வேகமும் (Aggressive Instinct) காம வேகமும் (Sex Instinct) வன்முறைகளாகவும் மாறி இருக்கிறது. இலியது - கிரேக்க காவியத்தில் பார்த்தோமானால் ´பாரிஸ்´ என்னும் ´ட்ராய்´ (Troy) இளவரசன் அக்கேய கிரேக்கர் தலைவனாகிய மெனிலாஸின் என்பவனின் மனைவி ஹெலன் மீது ஏற்பட்ட காமத்தால் கடத்திச் செல்ல, ஆத்திரமடைந்த கிரேக்கர்கள் ஆயிரம் போர்க்கப்பல்களில் சென்று ட்ராய் நகரத்தை முற்றுகையிட்டு 10-ஆண்டுகள் யுத்தம் செய்து லட்சக்கணக்கில் போர் வீரர்கள் இறந்து, இறுதியில் ஹெலன் மீட்கப்பட்டாள். பின் ட்ராய் நகரத்தையே தீ வைத்து அழித்தனர் கிரேக்கர்கள். இவை பெண் ஆக்கிரமிப்பால் நடந்த வரலாற்றுப் போர்களில் முதலாவதாக சொல்லப்படுகிறது. இராமாயணக் கதைகள் எல்லாம் இதற்கு பிறகு நடந்திருக்கிறது. இராமாயணமும், மகாபாரதமும் உடாண்ஸ் காவியம். அப்படி ஒரு நிகழ்வுகள் நடந்திருக்கவே முடியாது என்ற குற்றச்சாட்டுக்கள் இருப்பது போன்று ´டராய்´ நகரச் சம்பவங்களும் கற்பனை என்றும் சொல்லுவதுண்டு. ஆனால் ஹெலனின் கற்பைச் சோதிக்க கணவன் மெனிலாஸின் நெருப்பில் இறங்கச் சொல்லியிருக்க மாட்டான் என்று நம்புவோமாக...
நம்நாட்டில் இராமாயணமும், மகாபாரதமும் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களாக இருந்தவை இரண்டு பெண்கள். சீதையை அக்கிரமித்ததற்காக எழுந்த போர் இராமாயணம். திரெவுபதியை சேலையைப் பிடித்து இழுத்து அசிங்கப்படுத்தியதில் தொடங்கியது மகாபாரதப் போர். வக்கீரக்குணம் எல்லை மீறும் போது அங்கே ´அறநெறி´ ஆவேசப்படுகிறது. இவை மனித வாழ்க்கை முழுவதும் எழுதப்படாத சட்டமாக இயங்குகிறது அல்லது சமூகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணங்கள்.
மனிதன் ஒரு காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கோட்பாடுகள் வேறொரு காலத்திற்கு அநாகரிகமாகவும், விமர்சனத்திற்கும் உள்ளாவது போல் மனிதனின் பால் உணர்வுகளை கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று முதன் முதலாக வலியுறுத்தியவர்கள் யூதமதத்தைச் சார்ந்தவர்களே. தாய், மகன், மகள், தந்தை குறித்த உறவுகளுக்கென்று பண்பை உருவாக்கியது யூத மதம். தாய் கடவுள் ஸ்தானத்தில் வைக்கப்பட்டாள். இவையெல்லாம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு நடந்த சம்பவங்கள்.
´மோசஸ்´ உருவாக்கிய பத்துக்கட்டளைகள் யூத மக்களிடம் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கியது. அய்ரோப்பாவில் கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்பு செல்த் (Celte), த்யூத் (Druide) போன்ற மதங்கள் இருந்தன. அக்காலக்கட்டங்களில் குறுநில மன்னர்களையும் விட மதகுருமார்களிடம் செல்வாக்கு அதிகமிருந்தது. மன்னர்களுக்கு அலோசனைகளை வழங்குவதும் மதகுருமார்களே. மன்னர்கள் போர்க் காலங்களில் வேற்று நாட்டுக்கு செல்லும் போது அதிகாரங்கள் மதவாதிகளிடம் இருந்தன. பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் மனைவிமார்களை விட்டு வெளியூருக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் இதர ஆண்களோடு கலவிச் சேர்க்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக இரும்பினால் ஆன உள்ளாடையை [ஜட்டி மாடலில்] போட்டு பூட்டி வைக்கும் வழக்கமும் ஏற்பட்டன. மன்னர்களும், சீமான்களும் இம்முறையைக் கையாண்டனர். தங்கள் வாரிசில் கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் மிகத் தீவிரமான முறைகளை கடைப்பிடித்தனர். அந்தப்புரத்தில் இருக்கும் காவலாளிகள் அங்கிருக்கும் பெண்களுடன் புணர்ச்சியில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்குறிகள் வெட்டப்பட்டன. 10-இல் 3-பேர்கள் பிழைப்பதே மிக அரிதானதாக இருந்தன.
அதே போல் போர்க்களத்தில் இருந்த வீரர்கள் நெடுங்காலமாக புணர்ச்சியில் ஈடுபடாததால் தங்களுடன் இருந்த வீரர்களுடன் புணர்ச்சியில் ஈடுபட்டனர். ஓரினச் சேர்க்கை அதிகரிக்க இவையும் ஒரு காரணமாகும். இன்றும் கூட சிறைக்கைதிகளும், இராணுவத்தில் இருக்கும் வீரர்களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால் இவ்வழக்கத்திற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே கடுமையான எதிர்ப்பு இருந்தது.ஓரினச் சேர்க்கை தோன்றுவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுவது உண்டு.
ஆடையில்லாமல் வாழ்ந்த மனிதன் தன் உடலை அழகுப்படுத்த வேண்டும் என்ற உணர்வுகள் வந்த போது தன்னை அழகுப்படுத்தி இரசிக்க ஆரம்பித்தது நாளடைவில் தன்னைப் போன்றே அழகுணர்ச்சியுடன் அழகுப்படுத்திக் கொண்டுள்ள மனிதனிடம் ஏற்பட்ட அதீத ஈர்ப்பும் அதை இரசித்துப் பார்த்தும் தடவிப் பார்த்ததிலும் ஏற்படுத்திய சிலிர்ப்புகளில் புணர்ச்சிகளில் ஈடுபட ஆரம்பித்திருக்க வேண்டும் என்றும் சொல்லுவதுண்டு.
´கிரேக் ஆண்டிக்´ இனத்தினர் முதல் முதலாக தங்களை அழகுப்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டியதாகவும் கூறப்படுகின்றது. இக்காலகட்டத்திலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருந்திருக்கின்றனர். ஆண் ஆணை புணர்வதும், பெண்ணை பெண் புணர்வதும் அல்லது சில ஆண்களுடனும் பெண்களுடனும் இணைந்து புணரும் இருபால் சேர்க்கையும் தோன்றியது. ரோமபுரி நாட்டிலும் அடுத்து அரபு நாடுளிலும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் இருந்திருக்கிறதாக வரலாறுகளில் காணப்படுகின்றன.
'அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண்´ உலகம் முழுவதும் தன் செல்வாக்கால் கிறிஸ்துவ மதம் பரவ காரணமாணவன். உலகத்தையே தான் காலடிக்குள் இருப்பதாக சொல்லிக் கொண்டு ஆங்காரத்துடன் திரிந்தவன். தன் செல்வாக்கை பல தவறான வழிகளில் பயன்படுத்தி மோசமான அடையாளத்தை வரலாற்றில் பதிவு செய்தவன். அளவுக்கு அதிகமான பெண்களை அனுபவித்து அனுபவித்து சலித்துப் போய் முதல் முதலான ஆணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட ஆரம்பித்தான். வரலாற்று ஆதாரப்படி உலகில் இவனே ஓரினப்புணர்ச்சியில் முதல் ஆளாய் அடையாளப்படுத்தப்படுகிறான்.
பால் புணர்வுகள் கட்டுக்குள் அடக்கப்பட்ட காலக்கட்டங்களில் பெண்கள் மீதும் அதிக திணிப்புகளும், ஆதிக்கமும் செலுத்த ஆரம்பித்த காலகட்டங்கள் அவை. அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண் பெண்களுடன் புணர்ச்சி செய்வதில் வெறுப்பேற்பட்ட பின், பெண் சேர்க்கையில் அதீக ஆர்வம் காட்டினால் பிசாசு பேய் புகுந்திருப்பதாக உயிரோடு நெருப்பில் போடப்பட்டாள். அதற்கு காரணமானவன் அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண்.
இப்படி அனேக யுத்தங்கள் முறையற்ற காமத்தாலும், வன்மையாலும், ஆக்கிரமிப்பாலும் நடைப்பெறுவதும், மறுபுறம் பொது மக்களிடமும் தீராக் காமமும், அதனால் நடக்கும் அடிதடிகளையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்த மனவியல் ஞானி ´ஸிக்மண்ட் ப்ராய்டு´.... "காம வேகமும், ஆக்கிரமிப்பு வேகமும் மனித மனத்தை ஆட்டிப்படைக்கும் உந்து சக்திகளுக்குள் முதன்மையானது" என்றார். முதலில் இக்கோட்பாட்டை ஏற்க மறுத்தது மருத்துவ உலகம். ப்ராய்டு கிண்டல் செய்து பழிக்கப்பட்டார். நாளடைவில் அக்கோட்பாட்டின் பலத்தை மனஆராய்ச்சி செய்யும் மருத்துவ உலகம் ஏற்றுக் கொண்டது. இன்று ´Psychatry´ என்னும் மனநோய் சிகிச்சை மருத்துவம் பெருவளர்ச்சி அடைந்திருக்கிறது.
[2]
"இயற்கையின் பரிணாம சக்தியின் மாபெரும் படைப்பு மனிதனை உருவாக்கி வைத்திருப்பது. மனிதனின் உடல்கூறு வேகமும் [Somatic], மரபுக்கூறு வேகமும் [Genetic] ஒன்றுக்கொன்று முரண்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதா என்பதே, இன்றைய ஆராய்ச்சியின் மையப்புள்ளி." - [ஜோனாஸ் சால்க், ´உயிரியல் ஆராய்ச்சிப் பேரறிஞர்´]
´அமீபா மனிதனின்´ ஆரம்ப நிலையில் இருந்து நடுநிலை காலத்தில் மனிதர்களுக்குள் வளர்ந்த பகுத்தறிவுச் சிந்தனை புணர்ச்சிகளை வரையறுக்குள் கொண்டுவந்தது. கட்டுப்பாடுகளை மீற முற்பட்ட மனிதன் சமுகத்திற்கு தெரியாமல் தன் இச்சைகளை தீர்த்துக் கொள்ள முனைந்தான். சட்டங்கள் தோன்றிய காலக்கட்டத்தில் அத்துமீறல்களுக்கு கடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டன. தண்டனைகள் ஒவ்வொரு சமுகத்திலும் [நாடுகளில்] அவரவர் கடுமையான சட்ட விதிகளின்படி மனிதன் தண்டிக்கப்பட்டான். ஆகையால் மனிதனின் செயல்பாடுகள் கட்டுக்குள் இருந்தன. புணர்ச்சிகளின் கட்டுப்பாடுகள் மனிதனை பல்வேறு தவறான அணுகுமுறைக்கு கொண்டுச் சென்றது.
மருத்துவ உலகம் புணர்ச்சிகளில் ´இயற்க்கைக்கு முரணானது, எதிரானது´ போன்ற கோட்பாடுகளை, ´மதம்´ போல் முன்வைக்கவில்லை. ஆனால் அதன் பாதிப்புக்களையும், மனிதனின் சிந்தனைகளில் தூண்டும் வன்மமும், குரூரமும் குறித்து எச்சரிக்கை செய்கிறது. மனிதனின் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் வரம்புக்கு மீறிய புணர்ச்சி உணர்வுகள் கேடானது என்கிறது. புணர்ச்சியாளர்களை மருத்துவ உலகம் மூன்று வகைப்படுத்துகிறது.
1.ஆணும், பெண்ணும் புணர்ச்சியில் ஈடுபடுவது. 2.பெண்ணும் பெண்ணும் [Lesbian] அல்லது ஆணும் ஆணும் புணர்ச்சியில் ஈடுபடுவது [Homo Sex]
3.ஆண்கள், பெண்கள் என இருபால்உணர்ச்சியாளர்களும் [bisexuals] இணைந்து குரூப் செக்ஸில் ஈடுபடுவது [group sex]´Homo´ [ஹோமோ] என்ற வார்த்தை கிரேக்க மொழியாகும். ´Homo´ என்றால் ஒரே மாதிரியானவை என்று அர்த்தம்.
மருத்துவ உலகம் குறிப்பிட்ட 3-புணர்ச்சி வகைகளையும் மீறி பலவகைகளில் அதிகரித்துப் போய்விட்ட புணர்ச்சிகளுக்கு என்ன ´குறியீடு´ வைப்பது என்று தடுமாறிப் போய்விட்டது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த உளவியல் நிபுணரான ´கார்ல் மரியா பென் கெர்ட்´, ´ஹோமோ செக்ஸ்´ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். கிரேக் நாட்டில் இருந்த ´லெஸ்போஸ்´ [Lesbos] என்ற தீவில் கி.மு 7-ஆம் நூற்றாண்டில் வசித்த பெண்கள், மற்ற பெண்களுடன் சேர்க்கையில் ஈடுபட்டனர். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த கவிஞரான ´ஸாப்போ´ என்பவர் அத்தீவு குறித்தும், பெண்களின் சேர்க்கை குறித்தும் எழுதி இருந்த கவிதைகளில் ´லெஸ்போஸ்´ என்ற வார்த்தை அதிகமாக காணப்பட்டது. அவையே பின்னாலில் பெண்கள் ஒரினச்சேர்க்கைக்கு "லெஸ்பியன்" என்ற குறியீட்டு சொல்லாக வழக்கத்துக்கு வந்தது.
கிரேக், ரோம் போன்ற நகரங்களில் ஒரினச்சேர்க்கை தவறாக பார்க்கப்படவில்லை. கி.மு வரை இந்நிலைமையே இருந்து வந்தது. கி.பி4-ஆம் நூற்றாண்டுக்கு பின் ஒரினச்சேர்க்கையாளர்கள் மீது இருந்த அங்கீகாரம் இந்நாடுகளில் மாறத் தொடங்கியது. இயற்க்கைக்கு புறம்பான பாலீயல்கள் பாவகரமான செயலாக கூறியது மதம்.19-ஆம் நூற்றாண்டில், "ஒரினச்சேர்க்கை என்பது மனநலம் பாதிக்கும் உறவானது மட்டுமல்லாமல் உடல்நலத்திற்கு கேடானது என்றும், பல தொற்று நோய்களை ஏற்படுத்தக் கூடியதும், மனவக்கீரங்களை அதிகரிக்கச் செய்து மனிதர்களை கட்டுப்பற்றவர்களாக மாற்றச் செய்து சமூகத்தில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதுமாகும்" என்று மருத்துவ உலகம் சொல்லிவிட்டது.
இக்காலக்கட்டங்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த மாவீரன் நெப்போலியன் 1804- ஆம் ஆண்டில் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தவறல்ல என்று சட்டம் கொண்டு வந்தார். [நெப்போலியன் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்]ஐரோப்பாவில் மக்களாட்சி வந்த போது சட்டங்கள் மாற்றப்பட்டன. அதில் ஒரினச்சேர்க்கை குற்றமாக்கப்பட்டது. பெல்ஜியம், நெதர்லாந்து - போன்ற நாடுகளில் ஒரினச்சேர்க்கையை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
ஓரினச்சேர்க்கையாளர்களின் சொர்க்கபுரி என அழைக்கப்படும் நாடு "ஸ்பென்." 1975-இல் பிரான்சிஸ்கோ பிரான்கோவின் மறைவுக்கு பின் [இவர் இராணுவ ஆட்சி என்னும் பெயரில் சர்வாதிகாரத்தனத்தில் ஆண்டவர்] ஜனநாயக ஆட்சியில் 1979-ஆம் ஆண்டு செக்ஸ் சுதந்திரத்திற்கு அதிக உரிமை கொடுக்கப்பட்டது. ஓரினச்சேர்கையாளர்களுக்கு சட்டபூர்வமாக அங்கீகாரம் அளித்தது.
நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளுக்கு அடுத்ததாக ஸ்பெயின் நாட்டில் ஓரினச்சேர்க்கை அங்கீகரிக்கப்பட்டது. ஸ்பெயினில் பெரும்பான்மையான மக்களின் அங்கீகாரம் பெற்றது ஓரினச்சேர்க்கை. கத்ரோலிக்கர் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் அவர்களின் எதிர்ப்புக் குரல் பெரியதாக ஒலிக்கவில்லை. 1985-க்கு பின் ஸ்பெயினில் ´கூட்டுக் கலவி´ [Bisexual] புணர்ச்சிகள் அதிகரித்தது. ´ஈஸ்டர் கார்சியா´ என்னும் அரசியல் ஆய்வாளர் ஸ்பெயினில் பொருளாதாரத்தை விட செக்ஸ்சில் அதிக சுதந்திரம் இருக்கிறது. இவை மக்களுக்கு கட்டுப்பாடான வாழ்க்கை முறையையும் சிந்தனையையும் சிதைத்துவிடக்கூடும் என்று எச்சரித்தார். அவர் கூற்றுப்படியே அதிக சுதந்திரம் குரூப் செக்ஸ் வரையில் அதிகரிக்கச் செய்த போது அரசாங்கம் விழித்துக் கொண்டது.
ஸ்பெயின் பிரதமரான ´ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ்´ சமூதாயச் சீர்திருத்த நடவடிக்கை என ஓரினச்சேர்க்கை சட்டத்தை தடை செய்ய முயன்ற போது "சமூதாயச் சீர்திருத்தம் என்ற பெயரில் செக்ஸ் சுதந்திரத்தை முடக்க நினைக்கும் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டோம்" என்று பெரும்பான்மையான ஒரினச்சேர்க்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் ஸ்பெயின் மக்களிடம் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட ´கூட்டுக்கலவி´ [Bisexual] முறையில் வெளிப்படையாக பேச இயலவில்லை. அமீபா மனிதனின் உச்சகட்ட வெறித்தன்மையாக கூட்டுக்கலவியின் ஆண் பெண் இருபாலரின் புணர்ச்சிகளை குறித்து மருத்துவ உலகம் கடும் விமர்சனங்களை முன் வைத்ததும் ஒரு காரணம்.
ஆணுடன் ஆண்; பெண்ணுடன் பெண் செய்துக் கொள்ளும் ஓரினச்சேர்க்கை திருமணங்கள், அவர்கள் தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளின் மனநிலைகள் குறித்து அதிகம் விவாதத்திற்குள்ளானது. ஸ்பெயின் பிரதமரான ´ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ்´ சமூதாயச் சீர்திருத்தநடவடிக்கை என ஓரினச்சேர்க்கை சட்டத்தை தடை செய்ய முயன்றபோது, "சமூதாயச் சீர்திருத்தம் என்ற பெயரில் செக்ஸ் சுதந்திரத்தைமுடக்க நினைக்கும் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டோம்" என்று பெரும்பான்மையான ஒரினச்சேர்க்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
ஓரினச் சேர்க்கையாளர்களின் சட்ட ரீதியான அங்கீகாரத்தை மறுபரீசிலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஸ்பெயின் சமூக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரினச்சேர்க்கையின் திருமணத்தை ஆதரிக்கும் போது நாளை கூட்டுக்கலவியாளர்கள் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு திருமணம் நடக்கிறது. அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைக்கும் போது நாங்கள் இருபால்புரணர்ச்சியாளர்கள்; ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கோட்பாடு ´மனித உரிமை மீறல்´ யார் யாரோடும், எத்தனை பேரோடும் இருபாலுணர்ச்சிகளில் புணர்வதற்குசட்ட அங்கீகாரம் கோரினால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியில் ஸ்பெயின் அரசாங்கம் குழம்பிப் போய்கிடக்கிறது. அப்படி யாரும் இன்னும் தைரியமாக முன் வந்து வாதங்களைவைக்கவில்லையானாலும் நாளை என்ன நடக்குமோ?
ஸ்பெயின் நாட்டின் கதை இப்படி போய் கொண்டிருந்தால் கனடாவை கொஞ்சம் ´நோட்டம்´ விட்டு வைப்போம்...
2003-இல் கனடாவில் பிரதமாக இருந்த ´ஜான் கிறச்சியன்´ ஐரோப்பாவில் சில நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரிப்பட்டுள்ளதைப் போல் கனடாவிலும் விரைவில் ஓரினச்சேர்க்கைக்கு சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்த போது கட்சிக்குள்ளிருந்தும் பொது மக்களில் பெரும்பான்மையோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கம் போல் கட்சிக்குள் கருத்துப்பிளவுகள். ஆனால் தற்போதைய பிரதமரான ´போல் மார்ட்டின்´ - ஜான் கிறிச்சியன் கருத்தை ஆதரித்தார்.
2003-இல் நிறைவேற்ற முடியாத தீர்மானத்தை போல் மார்ட்டின் பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தினத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிப்பதுப்பற்றி கருத்துக்கணிப்பும் நடைப்பெற்றது. கருத்துக்கணிப்பு நடைப்பெறுவதற்கு முன்பே கனடாவில் 10-மாநிலங்களில் Alberta, Ontario, Nova Scotia, Ontario, Newfoundland Labrador Manitoba, British Columbia, Quebec- ஒரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளும் உரிமை உள்ளது.
பிரான்சில் சில வருடங்களுக்கு முன்பு 'போர்தோ' என்னும் இடத்தில் ´பேகல்´ என்ற ஊரைச் சேர்ந்த மேயர் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளித்ததால் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் சிறை தண்டனை கொடுத்த சம்பவமும் உண்டு.
ஒரினச் சேர்க்கையாளர்களின் சமஉரிமைப் பிரச்சனைகளும், சட்ட ரீதியான அங்கீகாரமும் ஒவ்வொரு நாட்டிலும் தலையை எதிலாவது முட்டிக் கொள்ளத் தோன்றும் அளவுக்கு மிஞ்சிப் போகிறது. அட, "பரவாயில்லையப்பா நம் நாட்டில் இதெல்லாம் கிடையாது என்று நிம்மதி மூச்சு விடுபவர்களுக்காக"....
"இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது 10-ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்" *[இந்திய தண்டனைச் சட்டம். பிரிவு:377]
இச்சட்டம் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் பிரச்சனையை கிளப்பியது. இச்சட்டத்தை எதிர்த்து டெல்லியில் இருக்கும் ´நாஸ் அறக்கட்டளை´ உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்தியச் சட்டம் 377-இப்பிரிவின்படி அதிகப்பட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வரை வழங்கலாம். இந்தியாவில் இருக்கும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இச்சட்டம் அநீதி இழைப்பதாக கூறியுள்ளது.எழுத்தாளர் விக்ரம் சேத், நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென், அருந்ததி ராய் உள்பட மற்றும் சிலர் இந்தியச் சட்டம் 377-குறித்து விமர்சனங்களை வைத்தனர். இச்சட்டத்தினால் அரவானிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடியதாக இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
2006-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் மட்டும் 24-லட்சம் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. இதில் எட்டு சதவிதத்தினரை மட்டுமே அடையாளங் காணமுடிவதாக சொல்லப்படுகின்றது. இந்தியாவில் முதல் முதலாக ஓரினச்சேர்க்கைக்கு எதிரான இந்தியச்சட்டப் பிரிவு 377-ரத்து செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை - மத்திய சுகாதார பிரிவு, குடும்ப நல துறையும் கலந்தாலோசித்தன. முடிவில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-தடை செய்யப்பட்டது. ஆனால் ஒரினச்சேர்க்கைக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இருப்பினும் சென்ற வருடம் பஞ்சாப் மாநிலத்தில் இரு பெண்கள் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களே இந்தியாவில் முதலாவதான ´ஒரினச்சேர்க்கை தம்பதிகள்.´ [தமிழில் வேறு எப்படி சொல்வதென்று தெரியவில்லை]
நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று தைரியமாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இந்தியாவில் ஒரினச்சேர்க்கையாளர்கள் குறைவு தான். அதே போல் கூட்டுக்கலவி பற்றி பேசும் இருபால்புணர்ச்சியாளர்களில் ஆண்கள் துணிந்து கூட்டுக்கலவி பற்றி பேசினாலும், இந்தியாவிலும் உலகில் இதர பகுதிகளிலும் அதில் ஈடுபடும் பெண்கள் தங்களை ´இருபால் புணர்ச்சியாளர்கள்´ என்று துணிந்து சொல்வதில்லை. இப்படி ஓரினச்சேர்க்கையை குறித்தும், ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்தும் அதிகம் தற்போது பேச வைத்ததற்கு காரணம், "கலிபோர்னியாவில் அண்மையில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணச் சட்டத்தை ரத்து செய்தது."
"ரத்து செய்யும் உரிமையை அரசாங்கம் எடுக்கவில்லை." மக்களின் ஓட்டெடுப்பில் விடப்பட்டு தீர்மானிக்கப்பட்டது. 20-வருடங்களுக்கு முன்பு இதே மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் மற்றும் சிறுவர்களை தத்தெடுத்து வளர்க்கும் போக்குகள் குழந்தைகளின் மனநலம் குறித்த விவாதங்கள் ஒரினச்சேர்க்கையாளர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அதிகமான விவாதங்கள் எதிர் காலம் குறித்த எச்சரிக்கை உணர்வுகள் ஒரினச்சேர்க்கையாளர்களை தனி மனித சுதந்திர உணர்வுகளை நாங்கள் தலையிடவில்லை. ஆனால் சட்டரீதியான அங்கீகாரங்கள் அளிப்பதை எதிர்க்கிறோம் என்கின்றனர்.
இப்படி கலவியல் பிரச்சனைகள் பெரும் பிரச்சனையாக சமூகத்தை ஊடுறுவி நிற்கும் போது, மனிதனுக்குள் இருக்குள் "அடக்க முடியாத வன்முறை வெறியும், அடக்க முடியாத பாலுணர்வுப் பசியும், இருக்கும் வரை மனித இனம் அச்சம் இன்றி முன்னேற முடியாது." என்று ´ஸிக்மண்ட் ஃபீராய்டு´ சொல்லியவைகளை நாம் கடக்க வேண்டியிருக்கிறது!
தமிழச்சி 15/11/2008

"அடக்க முடியாத வன்முறை வெறியும், அடக்க முடியாத பாலுணர்வுப் பசியும், இருக்கும் வரை மனித இனம் அச்சம் இன்றி முன்னேற முடியாது." - ´ஸிக்மண்ட் ஃபீராய்டு´ [Sigmund Freud] [மனத்தத்துவ ஆராய்ச்சியாளர்.
புணர்ச்சியின் வரம்பற்ற நிலைகளே மனிதனின் இயல்பென்றும், அதுவே நாகரிக மனிதனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்றும், சமூகத்திடம் கட்டுப்பாடுகளை கட்டுடைக்க முற்படும் போது முதல் கட்டுடைப்பு பாலுணர்வுக்கு தடையாக எதுவும் இருக்கக் கூடாது என்பதே. அதுவே மனித நாகரீகத்தின் அந்தஸ்துக் குறியீட்டாகவும் (Status Symbol) சிலர் நினைக்கின்றனர். அதன் வீரியம் எந்தளவுக்கு ஒரு சமூகத்தை தாக்கத்திற்கு உள்ளாக்குகிறது என்பதை அனுபவம் சொல்லும் போது, கோட்பாடுகளை கட்டுடைப்புகள் வரைமுறைக்குள் மீண்டும் கொண்டு வருகிறது; நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் அறநெறி.
வாழ்வில் எழுதப்படாத சட்டங்களாக மனித குலத்தின் மேன்மையை நோக்கி அழைத்துச் செல்லும் அறநெறிக் கோட்பாடுகளுடன் மனிதன் முரண்படும் போதெல்லாம் தோற்றுக் கொண்டே இருக்கின்றான். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சமீபத்தில் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு விதிக்கப்பட்ட தடை..
என்றாயிற்று கலிபோர்னியாவில்?
கலிபோர்னியாவையும், ஓரினச்சேர்க்கையாளர்களையும் பற்றி பேசுவதற்கு முன் மனிதன் என்பவன் யாரென்றும், அவனுடைய செயல்பாடுகளையும் கொஞ்சம் பார்ப்போம்.
"கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் கடற்கரையோரத்தில் ஆழங்குறைந்த நீரில் சூரிய ஒளிக்கதிர்களின் தொடுகை விசேஷத்தால் சில மூலக்கூறுகள் இணைந்து 'புரதத் துகள்' ஒன்று உருவாகிறது. அத்துகல்களில் இருந்த மூலக்கூறுகள் இரண்டாயிற்று, நான்காயிற்று, எட்டாயிற்று..."
இப்படியே அதன் தன்னாற்றல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த தன்னாற்றலில் இருந்தே (உயிரற்ற மூலங்கள்) உயிர் இயக்கம் கொண்ட 'வஸ்து' உருவாகிறது. இந்த புரதப் பிண்டமே "உயிர் வர்க்கத்தின் தொடக்கம்" என்று விஞ்ஞானம் சொல்கிறது.
நீரில் தோன்றிய உயிர்த்துகளே கோடான கோடி ஆண்டுகளுக்கு பின் அமீபாப் பூச்சியாகவும், பின் மீனாக, தவளையாக, பறவையாக, பாலூட்டும் மிருகங்களாக, மனிதனாக பரிணாமம் அடைந்திருக்கிறது.
"விஞ்ஞானத்தில் மனித பரிணாமத்தை குறித்து ஓர் வரைப்படம் உண்டு. அடர்ந்த விருட்சக மரம். அதில் பல கிளைகள். மரத்தை உயிராகவும், அதிலிருந்து தோன்றிய பல கிளைகளில் ஒரு கிளை பூச்சிகள், ஒரு கிளை பறவைகள், மற்றொரு கிளை பாலூட்டும் பிராணிகள், ஒரு கிளை மனித இனம். இப்படி உயிர்கள் அனைத்தும் ஒன்றே என்பதை உணர்த்தும் வரைப்படம்.
"அமீபாப்பூச்சியில் பாக்டீரியாவில் துடிக்கும் உயிரே மனிதனுக்குள்ளும் துடித்துக் கொண்டிருக்கிறது" என்று விஞ்ஞானம் உயிர்தோற்றத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. மனித இனம் எப்போதுமே சோதனை செய்தல், தவறை உணர்தல், மீண்டும் சோதித்தல் என்ற முறையைப் பின்பற்றியே (Trial and error) முன்னேறி வந்துள்ளது. "அமீபா மனிதனின் குளறுபடிகளை"த் தான் நாம் வரலாறுகளாகவும் பார்க்கிறோம். எவ்வளவு நாகரிக வளர்ச்சி அடைந்தாலும் 'அமீபா மனிதனின்´ ஆக்கிரமிப்பாகிய மூர்க்கத்தனத்தை மாற்ற முடியாமல் இருக்கிறது. எங்கே தவறு நடந்திருக்கிறது? வரலாற்றை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த கால எச்சங்களில் எதைச் செய்யக் கூடாது, எதைச் செய்ய வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டுவருகிறோம். அப்படித்தான் ஓரினச்சேர்க்கையையும் ஆராய வேண்டியுள்ளது. "அமீபா மனிதனின் மன வக்கீரங்கள்" காமத்தில் மிருக நிலைக்கும் கீழே போய்விட்டது. ஆதிகால மனிதன் "கற்பு" என்ற சொல்லுக்கு அர்த்தம் உருவகப்படுத்தாத காலகட்டத்தில் உடன் பிறந்த சகோதிரிகளையும், பெற்ற தாயையும், மகனையும், மகளையும் புணர்ந்தார்கள்.
யாச்சோபின் என்ற வரலாற்று ஆய்வாளர் மதம் தோன்றுவதற்கு முன்பு இருந்த சமூக நிகழ்வுகளை, சராசரியாக பண்டைகால மக்களிடம் காணப்பட்ட விசித்திர வழக்கங்களை ஆதரங்களுடன் விளக்குகிறார். ´ஓடின்´ தன் மகள் பிரிக்காவுடன் இணைந்தது வம்ச விருத்திக்காக.
எகிப்திய நாட்டு தேவன் தன் தாயை மணந்ததும், லீசியார், எட்ருஸ் கானர், சிரீட்டர், அத்தீனியர், லெஸ்பெயின்கள், எகிப்தியர்கள் முதலியவர்களுக்குள் பலர் பலருடனும் புணர்ந்து வந்திருக்கின்றனர்.
மதம் தோன்றிய காலகட்டத்தில் பாபிலோன் நகரித்தில் பெண்கள் பருவமடைந்தால் ஏதேனும் ஓர் கிறிஸ்தவ ஆலயத்தில் யாராவது ஓர் ஆணுடன் சேர்க்கையில் ஈடுபட்டு தன்னுடைய கன்னித்தன்மையை அழித்துக் கொள்ளும் சடங்கை புனிதமான மதச்சடங்காக கருதி இருக்கின்றனர்.
மெம்பிஸ், அர்மீனியா, டயர்சி, டோன் - போன்ற பிரதேசங்களிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததாக யாச்சோபின் குறிப்பிடுகிறார்.
லிபியனைச் சேர்ந்த கன்னிப்பெண்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களுடன் இணைந்து திருமணத்திற்கு கொடுக்க வேண்டிய சீதனத்தை சம்பாதித்ததாகவும் காணப்படுகின்றது. யார் அதிகமான சீதனங்கள் வைத்திருக்கிறார்களோ அப்பெண்களையே மணக்க விரும்பி இருக்கின்றனர் ஆண்கள். திருமணத்திற்கு பிறகு மற்ற ஆண்களுடன் சேர்க்கையில் ஈடுபடுவதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. தாரசிய இனத்தினருக்குள்ளும் இவ்வழக்கம் இருந்திருக்கிறது.
எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓர் இளவரசி விபச்சாரத்தில் சேர்த்த பணத்தில் தனக்கென ஒர் பிரமீட் (Pyramid) கட்டியதாக வரலாறுகள் உண்டு.கி.மு 66-இல்
அரேபிய நாட்டில் அண்ணன் தங்கைகளிடம், தாய் மகன்களிடம், புணர்ச்சியில் ஈடுபட்டதாக ´ஸ்ட்டாபோ´ என்ற வரலாற்று அறிஞர் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார்.
வம்ச விருத்திக்காகவும், முறைக்கேடான முறையில் புணர்ச்சிகள் இருந்திருக்கின்றன. பின் ஓரளவு நாகரிகமடைந்த மனிதன் தாயையும், சகோதரியையும், மகளையும் புணர்வது அநாகரிகமானது என தவிர்த்தான். குழுக்களாக சிறு சிறு இனங்களாக திரிந்த மனிதக் கூட்டங்களை அரசாட்சிகள் ஆள ஆரம்பித்த கட்டங்களில் கூட மனிதனின் காமப்பசி வேறு திசைகளில் திருப்பி விடப்பட்டது.
ஆக்கிரமிப்பு வேகமும் (Aggressive Instinct) காம வேகமும் (Sex Instinct) வன்முறைகளாகவும் மாறி இருக்கிறது. இலியது - கிரேக்க காவியத்தில் பார்த்தோமானால் ´பாரிஸ்´ என்னும் ´ட்ராய்´ (Troy) இளவரசன் அக்கேய கிரேக்கர் தலைவனாகிய மெனிலாஸின் என்பவனின் மனைவி ஹெலன் மீது ஏற்பட்ட காமத்தால் கடத்திச் செல்ல, ஆத்திரமடைந்த கிரேக்கர்கள் ஆயிரம் போர்க்கப்பல்களில் சென்று ட்ராய் நகரத்தை முற்றுகையிட்டு 10-ஆண்டுகள் யுத்தம் செய்து லட்சக்கணக்கில் போர் வீரர்கள் இறந்து, இறுதியில் ஹெலன் மீட்கப்பட்டாள். பின் ட்ராய் நகரத்தையே தீ வைத்து அழித்தனர் கிரேக்கர்கள். இவை பெண் ஆக்கிரமிப்பால் நடந்த வரலாற்றுப் போர்களில் முதலாவதாக சொல்லப்படுகிறது. இராமாயணக் கதைகள் எல்லாம் இதற்கு பிறகு நடந்திருக்கிறது. இராமாயணமும், மகாபாரதமும் உடாண்ஸ் காவியம். அப்படி ஒரு நிகழ்வுகள் நடந்திருக்கவே முடியாது என்ற குற்றச்சாட்டுக்கள் இருப்பது போன்று ´டராய்´ நகரச் சம்பவங்களும் கற்பனை என்றும் சொல்லுவதுண்டு. ஆனால் ஹெலனின் கற்பைச் சோதிக்க கணவன் மெனிலாஸின் நெருப்பில் இறங்கச் சொல்லியிருக்க மாட்டான் என்று நம்புவோமாக...
நம்நாட்டில் இராமாயணமும், மகாபாரதமும் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களாக இருந்தவை இரண்டு பெண்கள். சீதையை அக்கிரமித்ததற்காக எழுந்த போர் இராமாயணம். திரெவுபதியை சேலையைப் பிடித்து இழுத்து அசிங்கப்படுத்தியதில் தொடங்கியது மகாபாரதப் போர். வக்கீரக்குணம் எல்லை மீறும் போது அங்கே ´அறநெறி´ ஆவேசப்படுகிறது. இவை மனித வாழ்க்கை முழுவதும் எழுதப்படாத சட்டமாக இயங்குகிறது அல்லது சமூகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணங்கள்.
மனிதன் ஒரு காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கோட்பாடுகள் வேறொரு காலத்திற்கு அநாகரிகமாகவும், விமர்சனத்திற்கும் உள்ளாவது போல் மனிதனின் பால் உணர்வுகளை கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று முதன் முதலாக வலியுறுத்தியவர்கள் யூதமதத்தைச் சார்ந்தவர்களே. தாய், மகன், மகள், தந்தை குறித்த உறவுகளுக்கென்று பண்பை உருவாக்கியது யூத மதம். தாய் கடவுள் ஸ்தானத்தில் வைக்கப்பட்டாள். இவையெல்லாம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு நடந்த சம்பவங்கள்.
´மோசஸ்´ உருவாக்கிய பத்துக்கட்டளைகள் யூத மக்களிடம் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கியது. அய்ரோப்பாவில் கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்பு செல்த் (Celte), த்யூத் (Druide) போன்ற மதங்கள் இருந்தன. அக்காலக்கட்டங்களில் குறுநில மன்னர்களையும் விட மதகுருமார்களிடம் செல்வாக்கு அதிகமிருந்தது. மன்னர்களுக்கு அலோசனைகளை வழங்குவதும் மதகுருமார்களே. மன்னர்கள் போர்க் காலங்களில் வேற்று நாட்டுக்கு செல்லும் போது அதிகாரங்கள் மதவாதிகளிடம் இருந்தன. பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் மனைவிமார்களை விட்டு வெளியூருக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் இதர ஆண்களோடு கலவிச் சேர்க்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக இரும்பினால் ஆன உள்ளாடையை [ஜட்டி மாடலில்] போட்டு பூட்டி வைக்கும் வழக்கமும் ஏற்பட்டன. மன்னர்களும், சீமான்களும் இம்முறையைக் கையாண்டனர். தங்கள் வாரிசில் கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் மிகத் தீவிரமான முறைகளை கடைப்பிடித்தனர். அந்தப்புரத்தில் இருக்கும் காவலாளிகள் அங்கிருக்கும் பெண்களுடன் புணர்ச்சியில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்குறிகள் வெட்டப்பட்டன. 10-இல் 3-பேர்கள் பிழைப்பதே மிக அரிதானதாக இருந்தன.
அதே போல் போர்க்களத்தில் இருந்த வீரர்கள் நெடுங்காலமாக புணர்ச்சியில் ஈடுபடாததால் தங்களுடன் இருந்த வீரர்களுடன் புணர்ச்சியில் ஈடுபட்டனர். ஓரினச் சேர்க்கை அதிகரிக்க இவையும் ஒரு காரணமாகும். இன்றும் கூட சிறைக்கைதிகளும், இராணுவத்தில் இருக்கும் வீரர்களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால் இவ்வழக்கத்திற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே கடுமையான எதிர்ப்பு இருந்தது.ஓரினச் சேர்க்கை தோன்றுவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுவது உண்டு.
ஆடையில்லாமல் வாழ்ந்த மனிதன் தன் உடலை அழகுப்படுத்த வேண்டும் என்ற உணர்வுகள் வந்த போது தன்னை அழகுப்படுத்தி இரசிக்க ஆரம்பித்தது நாளடைவில் தன்னைப் போன்றே அழகுணர்ச்சியுடன் அழகுப்படுத்திக் கொண்டுள்ள மனிதனிடம் ஏற்பட்ட அதீத ஈர்ப்பும் அதை இரசித்துப் பார்த்தும் தடவிப் பார்த்ததிலும் ஏற்படுத்திய சிலிர்ப்புகளில் புணர்ச்சிகளில் ஈடுபட ஆரம்பித்திருக்க வேண்டும் என்றும் சொல்லுவதுண்டு.
´கிரேக் ஆண்டிக்´ இனத்தினர் முதல் முதலாக தங்களை அழகுப்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டியதாகவும் கூறப்படுகின்றது. இக்காலகட்டத்திலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருந்திருக்கின்றனர். ஆண் ஆணை புணர்வதும், பெண்ணை பெண் புணர்வதும் அல்லது சில ஆண்களுடனும் பெண்களுடனும் இணைந்து புணரும் இருபால் சேர்க்கையும் தோன்றியது. ரோமபுரி நாட்டிலும் அடுத்து அரபு நாடுளிலும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் இருந்திருக்கிறதாக வரலாறுகளில் காணப்படுகின்றன.
'அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண்´ உலகம் முழுவதும் தன் செல்வாக்கால் கிறிஸ்துவ மதம் பரவ காரணமாணவன். உலகத்தையே தான் காலடிக்குள் இருப்பதாக சொல்லிக் கொண்டு ஆங்காரத்துடன் திரிந்தவன். தன் செல்வாக்கை பல தவறான வழிகளில் பயன்படுத்தி மோசமான அடையாளத்தை வரலாற்றில் பதிவு செய்தவன். அளவுக்கு அதிகமான பெண்களை அனுபவித்து அனுபவித்து சலித்துப் போய் முதல் முதலான ஆணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட ஆரம்பித்தான். வரலாற்று ஆதாரப்படி உலகில் இவனே ஓரினப்புணர்ச்சியில் முதல் ஆளாய் அடையாளப்படுத்தப்படுகிறான்.
பால் புணர்வுகள் கட்டுக்குள் அடக்கப்பட்ட காலக்கட்டங்களில் பெண்கள் மீதும் அதிக திணிப்புகளும், ஆதிக்கமும் செலுத்த ஆரம்பித்த காலகட்டங்கள் அவை. அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண் பெண்களுடன் புணர்ச்சி செய்வதில் வெறுப்பேற்பட்ட பின், பெண் சேர்க்கையில் அதீக ஆர்வம் காட்டினால் பிசாசு பேய் புகுந்திருப்பதாக உயிரோடு நெருப்பில் போடப்பட்டாள். அதற்கு காரணமானவன் அலெக்ஸ்ராண்ஸ் லெக்ராண்.
இப்படி அனேக யுத்தங்கள் முறையற்ற காமத்தாலும், வன்மையாலும், ஆக்கிரமிப்பாலும் நடைப்பெறுவதும், மறுபுறம் பொது மக்களிடமும் தீராக் காமமும், அதனால் நடக்கும் அடிதடிகளையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்த மனவியல் ஞானி ´ஸிக்மண்ட் ப்ராய்டு´.... "காம வேகமும், ஆக்கிரமிப்பு வேகமும் மனித மனத்தை ஆட்டிப்படைக்கும் உந்து சக்திகளுக்குள் முதன்மையானது" என்றார். முதலில் இக்கோட்பாட்டை ஏற்க மறுத்தது மருத்துவ உலகம். ப்ராய்டு கிண்டல் செய்து பழிக்கப்பட்டார். நாளடைவில் அக்கோட்பாட்டின் பலத்தை மனஆராய்ச்சி செய்யும் மருத்துவ உலகம் ஏற்றுக் கொண்டது. இன்று ´Psychatry´ என்னும் மனநோய் சிகிச்சை மருத்துவம் பெருவளர்ச்சி அடைந்திருக்கிறது.
[2]
"இயற்கையின் பரிணாம சக்தியின் மாபெரும் படைப்பு மனிதனை உருவாக்கி வைத்திருப்பது. மனிதனின் உடல்கூறு வேகமும் [Somatic], மரபுக்கூறு வேகமும் [Genetic] ஒன்றுக்கொன்று முரண்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதா என்பதே, இன்றைய ஆராய்ச்சியின் மையப்புள்ளி." - [ஜோனாஸ் சால்க், ´உயிரியல் ஆராய்ச்சிப் பேரறிஞர்´]
´அமீபா மனிதனின்´ ஆரம்ப நிலையில் இருந்து நடுநிலை காலத்தில் மனிதர்களுக்குள் வளர்ந்த பகுத்தறிவுச் சிந்தனை புணர்ச்சிகளை வரையறுக்குள் கொண்டுவந்தது. கட்டுப்பாடுகளை மீற முற்பட்ட மனிதன் சமுகத்திற்கு தெரியாமல் தன் இச்சைகளை தீர்த்துக் கொள்ள முனைந்தான். சட்டங்கள் தோன்றிய காலக்கட்டத்தில் அத்துமீறல்களுக்கு கடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டன. தண்டனைகள் ஒவ்வொரு சமுகத்திலும் [நாடுகளில்] அவரவர் கடுமையான சட்ட விதிகளின்படி மனிதன் தண்டிக்கப்பட்டான். ஆகையால் மனிதனின் செயல்பாடுகள் கட்டுக்குள் இருந்தன. புணர்ச்சிகளின் கட்டுப்பாடுகள் மனிதனை பல்வேறு தவறான அணுகுமுறைக்கு கொண்டுச் சென்றது.
மருத்துவ உலகம் புணர்ச்சிகளில் ´இயற்க்கைக்கு முரணானது, எதிரானது´ போன்ற கோட்பாடுகளை, ´மதம்´ போல் முன்வைக்கவில்லை. ஆனால் அதன் பாதிப்புக்களையும், மனிதனின் சிந்தனைகளில் தூண்டும் வன்மமும், குரூரமும் குறித்து எச்சரிக்கை செய்கிறது. மனிதனின் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் வரம்புக்கு மீறிய புணர்ச்சி உணர்வுகள் கேடானது என்கிறது. புணர்ச்சியாளர்களை மருத்துவ உலகம் மூன்று வகைப்படுத்துகிறது.
1.ஆணும், பெண்ணும் புணர்ச்சியில் ஈடுபடுவது. 2.பெண்ணும் பெண்ணும் [Lesbian] அல்லது ஆணும் ஆணும் புணர்ச்சியில் ஈடுபடுவது [Homo Sex]
3.ஆண்கள், பெண்கள் என இருபால்உணர்ச்சியாளர்களும் [bisexuals] இணைந்து குரூப் செக்ஸில் ஈடுபடுவது [group sex]´Homo´ [ஹோமோ] என்ற வார்த்தை கிரேக்க மொழியாகும். ´Homo´ என்றால் ஒரே மாதிரியானவை என்று அர்த்தம்.
மருத்துவ உலகம் குறிப்பிட்ட 3-புணர்ச்சி வகைகளையும் மீறி பலவகைகளில் அதிகரித்துப் போய்விட்ட புணர்ச்சிகளுக்கு என்ன ´குறியீடு´ வைப்பது என்று தடுமாறிப் போய்விட்டது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த உளவியல் நிபுணரான ´கார்ல் மரியா பென் கெர்ட்´, ´ஹோமோ செக்ஸ்´ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். கிரேக் நாட்டில் இருந்த ´லெஸ்போஸ்´ [Lesbos] என்ற தீவில் கி.மு 7-ஆம் நூற்றாண்டில் வசித்த பெண்கள், மற்ற பெண்களுடன் சேர்க்கையில் ஈடுபட்டனர். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த கவிஞரான ´ஸாப்போ´ என்பவர் அத்தீவு குறித்தும், பெண்களின் சேர்க்கை குறித்தும் எழுதி இருந்த கவிதைகளில் ´லெஸ்போஸ்´ என்ற வார்த்தை அதிகமாக காணப்பட்டது. அவையே பின்னாலில் பெண்கள் ஒரினச்சேர்க்கைக்கு "லெஸ்பியன்" என்ற குறியீட்டு சொல்லாக வழக்கத்துக்கு வந்தது.
கிரேக், ரோம் போன்ற நகரங்களில் ஒரினச்சேர்க்கை தவறாக பார்க்கப்படவில்லை. கி.மு வரை இந்நிலைமையே இருந்து வந்தது. கி.பி4-ஆம் நூற்றாண்டுக்கு பின் ஒரினச்சேர்க்கையாளர்கள் மீது இருந்த அங்கீகாரம் இந்நாடுகளில் மாறத் தொடங்கியது. இயற்க்கைக்கு புறம்பான பாலீயல்கள் பாவகரமான செயலாக கூறியது மதம்.19-ஆம் நூற்றாண்டில், "ஒரினச்சேர்க்கை என்பது மனநலம் பாதிக்கும் உறவானது மட்டுமல்லாமல் உடல்நலத்திற்கு கேடானது என்றும், பல தொற்று நோய்களை ஏற்படுத்தக் கூடியதும், மனவக்கீரங்களை அதிகரிக்கச் செய்து மனிதர்களை கட்டுப்பற்றவர்களாக மாற்றச் செய்து சமூகத்தில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதுமாகும்" என்று மருத்துவ உலகம் சொல்லிவிட்டது.
இக்காலக்கட்டங்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த மாவீரன் நெப்போலியன் 1804- ஆம் ஆண்டில் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தவறல்ல என்று சட்டம் கொண்டு வந்தார். [நெப்போலியன் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்]ஐரோப்பாவில் மக்களாட்சி வந்த போது சட்டங்கள் மாற்றப்பட்டன. அதில் ஒரினச்சேர்க்கை குற்றமாக்கப்பட்டது. பெல்ஜியம், நெதர்லாந்து - போன்ற நாடுகளில் ஒரினச்சேர்க்கையை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
ஓரினச்சேர்க்கையாளர்களின் சொர்க்கபுரி என அழைக்கப்படும் நாடு "ஸ்பென்." 1975-இல் பிரான்சிஸ்கோ பிரான்கோவின் மறைவுக்கு பின் [இவர் இராணுவ ஆட்சி என்னும் பெயரில் சர்வாதிகாரத்தனத்தில் ஆண்டவர்] ஜனநாயக ஆட்சியில் 1979-ஆம் ஆண்டு செக்ஸ் சுதந்திரத்திற்கு அதிக உரிமை கொடுக்கப்பட்டது. ஓரினச்சேர்கையாளர்களுக்கு சட்டபூர்வமாக அங்கீகாரம் அளித்தது.
நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளுக்கு அடுத்ததாக ஸ்பெயின் நாட்டில் ஓரினச்சேர்க்கை அங்கீகரிக்கப்பட்டது. ஸ்பெயினில் பெரும்பான்மையான மக்களின் அங்கீகாரம் பெற்றது ஓரினச்சேர்க்கை. கத்ரோலிக்கர் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் அவர்களின் எதிர்ப்புக் குரல் பெரியதாக ஒலிக்கவில்லை. 1985-க்கு பின் ஸ்பெயினில் ´கூட்டுக் கலவி´ [Bisexual] புணர்ச்சிகள் அதிகரித்தது. ´ஈஸ்டர் கார்சியா´ என்னும் அரசியல் ஆய்வாளர் ஸ்பெயினில் பொருளாதாரத்தை விட செக்ஸ்சில் அதிக சுதந்திரம் இருக்கிறது. இவை மக்களுக்கு கட்டுப்பாடான வாழ்க்கை முறையையும் சிந்தனையையும் சிதைத்துவிடக்கூடும் என்று எச்சரித்தார். அவர் கூற்றுப்படியே அதிக சுதந்திரம் குரூப் செக்ஸ் வரையில் அதிகரிக்கச் செய்த போது அரசாங்கம் விழித்துக் கொண்டது.
ஸ்பெயின் பிரதமரான ´ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ்´ சமூதாயச் சீர்திருத்த நடவடிக்கை என ஓரினச்சேர்க்கை சட்டத்தை தடை செய்ய முயன்ற போது "சமூதாயச் சீர்திருத்தம் என்ற பெயரில் செக்ஸ் சுதந்திரத்தை முடக்க நினைக்கும் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டோம்" என்று பெரும்பான்மையான ஒரினச்சேர்க்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் ஸ்பெயின் மக்களிடம் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட ´கூட்டுக்கலவி´ [Bisexual] முறையில் வெளிப்படையாக பேச இயலவில்லை. அமீபா மனிதனின் உச்சகட்ட வெறித்தன்மையாக கூட்டுக்கலவியின் ஆண் பெண் இருபாலரின் புணர்ச்சிகளை குறித்து மருத்துவ உலகம் கடும் விமர்சனங்களை முன் வைத்ததும் ஒரு காரணம்.
ஆணுடன் ஆண்; பெண்ணுடன் பெண் செய்துக் கொள்ளும் ஓரினச்சேர்க்கை திருமணங்கள், அவர்கள் தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளின் மனநிலைகள் குறித்து அதிகம் விவாதத்திற்குள்ளானது. ஸ்பெயின் பிரதமரான ´ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ்´ சமூதாயச் சீர்திருத்தநடவடிக்கை என ஓரினச்சேர்க்கை சட்டத்தை தடை செய்ய முயன்றபோது, "சமூதாயச் சீர்திருத்தம் என்ற பெயரில் செக்ஸ் சுதந்திரத்தைமுடக்க நினைக்கும் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டோம்" என்று பெரும்பான்மையான ஒரினச்சேர்க்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
ஓரினச் சேர்க்கையாளர்களின் சட்ட ரீதியான அங்கீகாரத்தை மறுபரீசிலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஸ்பெயின் சமூக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரினச்சேர்க்கையின் திருமணத்தை ஆதரிக்கும் போது நாளை கூட்டுக்கலவியாளர்கள் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு திருமணம் நடக்கிறது. அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைக்கும் போது நாங்கள் இருபால்புரணர்ச்சியாளர்கள்; ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கோட்பாடு ´மனித உரிமை மீறல்´ யார் யாரோடும், எத்தனை பேரோடும் இருபாலுணர்ச்சிகளில் புணர்வதற்குசட்ட அங்கீகாரம் கோரினால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியில் ஸ்பெயின் அரசாங்கம் குழம்பிப் போய்கிடக்கிறது. அப்படி யாரும் இன்னும் தைரியமாக முன் வந்து வாதங்களைவைக்கவில்லையானாலும் நாளை என்ன நடக்குமோ?
ஸ்பெயின் நாட்டின் கதை இப்படி போய் கொண்டிருந்தால் கனடாவை கொஞ்சம் ´நோட்டம்´ விட்டு வைப்போம்...
2003-இல் கனடாவில் பிரதமாக இருந்த ´ஜான் கிறச்சியன்´ ஐரோப்பாவில் சில நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரிப்பட்டுள்ளதைப் போல் கனடாவிலும் விரைவில் ஓரினச்சேர்க்கைக்கு சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்த போது கட்சிக்குள்ளிருந்தும் பொது மக்களில் பெரும்பான்மையோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கம் போல் கட்சிக்குள் கருத்துப்பிளவுகள். ஆனால் தற்போதைய பிரதமரான ´போல் மார்ட்டின்´ - ஜான் கிறிச்சியன் கருத்தை ஆதரித்தார்.
2003-இல் நிறைவேற்ற முடியாத தீர்மானத்தை போல் மார்ட்டின் பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தினத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிப்பதுப்பற்றி கருத்துக்கணிப்பும் நடைப்பெற்றது. கருத்துக்கணிப்பு நடைப்பெறுவதற்கு முன்பே கனடாவில் 10-மாநிலங்களில் Alberta, Ontario, Nova Scotia, Ontario, Newfoundland Labrador Manitoba, British Columbia, Quebec- ஒரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளும் உரிமை உள்ளது.
பிரான்சில் சில வருடங்களுக்கு முன்பு 'போர்தோ' என்னும் இடத்தில் ´பேகல்´ என்ற ஊரைச் சேர்ந்த மேயர் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளித்ததால் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் சிறை தண்டனை கொடுத்த சம்பவமும் உண்டு.
ஒரினச் சேர்க்கையாளர்களின் சமஉரிமைப் பிரச்சனைகளும், சட்ட ரீதியான அங்கீகாரமும் ஒவ்வொரு நாட்டிலும் தலையை எதிலாவது முட்டிக் கொள்ளத் தோன்றும் அளவுக்கு மிஞ்சிப் போகிறது. அட, "பரவாயில்லையப்பா நம் நாட்டில் இதெல்லாம் கிடையாது என்று நிம்மதி மூச்சு விடுபவர்களுக்காக"....
"இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது 10-ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்" *[இந்திய தண்டனைச் சட்டம். பிரிவு:377]
இச்சட்டம் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் பிரச்சனையை கிளப்பியது. இச்சட்டத்தை எதிர்த்து டெல்லியில் இருக்கும் ´நாஸ் அறக்கட்டளை´ உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்தியச் சட்டம் 377-இப்பிரிவின்படி அதிகப்பட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வரை வழங்கலாம். இந்தியாவில் இருக்கும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இச்சட்டம் அநீதி இழைப்பதாக கூறியுள்ளது.எழுத்தாளர் விக்ரம் சேத், நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென், அருந்ததி ராய் உள்பட மற்றும் சிலர் இந்தியச் சட்டம் 377-குறித்து விமர்சனங்களை வைத்தனர். இச்சட்டத்தினால் அரவானிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடியதாக இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
2006-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் மட்டும் 24-லட்சம் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. இதில் எட்டு சதவிதத்தினரை மட்டுமே அடையாளங் காணமுடிவதாக சொல்லப்படுகின்றது. இந்தியாவில் முதல் முதலாக ஓரினச்சேர்க்கைக்கு எதிரான இந்தியச்சட்டப் பிரிவு 377-ரத்து செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை - மத்திய சுகாதார பிரிவு, குடும்ப நல துறையும் கலந்தாலோசித்தன. முடிவில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-தடை செய்யப்பட்டது. ஆனால் ஒரினச்சேர்க்கைக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இருப்பினும் சென்ற வருடம் பஞ்சாப் மாநிலத்தில் இரு பெண்கள் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களே இந்தியாவில் முதலாவதான ´ஒரினச்சேர்க்கை தம்பதிகள்.´ [தமிழில் வேறு எப்படி சொல்வதென்று தெரியவில்லை]
நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று தைரியமாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இந்தியாவில் ஒரினச்சேர்க்கையாளர்கள் குறைவு தான். அதே போல் கூட்டுக்கலவி பற்றி பேசும் இருபால்புணர்ச்சியாளர்களில் ஆண்கள் துணிந்து கூட்டுக்கலவி பற்றி பேசினாலும், இந்தியாவிலும் உலகில் இதர பகுதிகளிலும் அதில் ஈடுபடும் பெண்கள் தங்களை ´இருபால் புணர்ச்சியாளர்கள்´ என்று துணிந்து சொல்வதில்லை. இப்படி ஓரினச்சேர்க்கையை குறித்தும், ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்தும் அதிகம் தற்போது பேச வைத்ததற்கு காரணம், "கலிபோர்னியாவில் அண்மையில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணச் சட்டத்தை ரத்து செய்தது."
"ரத்து செய்யும் உரிமையை அரசாங்கம் எடுக்கவில்லை." மக்களின் ஓட்டெடுப்பில் விடப்பட்டு தீர்மானிக்கப்பட்டது. 20-வருடங்களுக்கு முன்பு இதே மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் மற்றும் சிறுவர்களை தத்தெடுத்து வளர்க்கும் போக்குகள் குழந்தைகளின் மனநலம் குறித்த விவாதங்கள் ஒரினச்சேர்க்கையாளர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அதிகமான விவாதங்கள் எதிர் காலம் குறித்த எச்சரிக்கை உணர்வுகள் ஒரினச்சேர்க்கையாளர்களை தனி மனித சுதந்திர உணர்வுகளை நாங்கள் தலையிடவில்லை. ஆனால் சட்டரீதியான அங்கீகாரங்கள் அளிப்பதை எதிர்க்கிறோம் என்கின்றனர்.
இப்படி கலவியல் பிரச்சனைகள் பெரும் பிரச்சனையாக சமூகத்தை ஊடுறுவி நிற்கும் போது, மனிதனுக்குள் இருக்குள் "அடக்க முடியாத வன்முறை வெறியும், அடக்க முடியாத பாலுணர்வுப் பசியும், இருக்கும் வரை மனித இனம் அச்சம் இன்றி முன்னேற முடியாது." என்று ´ஸிக்மண்ட் ஃபீராய்டு´ சொல்லியவைகளை நாம் கடக்க வேண்டியிருக்கிறது!
தமிழச்சி 15/11/2008
|

'இந்த இந்த அறநெறிக் கோட்பாட்டின்படி நட' என்று பரிந்துரை செய்ய வேண்டுமானால்; அந்த கோட்பாட்டில் கொஞ்சம் நியாயம் இருக்க வேண்டும். பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத ஒரு அறநெறியைக் கடைப்பிடி என்று எதற்குச் சொல்லி வைத்தார்களோ தெரியவில்லை.
இயேசுவின், "நீ உன் அயலானை உன்னைப் போலவே நேசி" என்ற உபதேசத்தை தான் ஃப்ராய்டு கடுமையான தாக்கி பேசினார். ஃபராய்டு மனத்தத்துவ ஆராய்சியாளர் என்பது அனேகருக்கு தெரிந்த சங்கதி. ஆனால், இயேசுவின் கோட்பாடுகளையெல்லாம் புளி கரைத்து சக்கையாக்கி குப்பைக்கு அனுப்பி விட்டார். பைபிளில் இருந்த அனேக வாக்கியங்களை ஃப்ராய்டு விமர்சித்திருக்கிறார் என்பது அனேகருக்கு தெரியாத சங்கதி.
"எதிராளி ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் திருப்பி காட்டு" போன்ற வாக்கியங்களுக்கு ஆயிரத்தெட்டு கேள்விகளை கேட்கிறார் இவர். எதற்கு அயலானை நேசிக்க வேண்டும்? அதனால் நமக்கென்ன லாபம்? அதனால் நமக்கென்ன நன்மை? அடுத்தவனை நேசிப்பது என்பது எப்படி சாத்தியமாகும்? அதற்கு என்ன வழி இருக்கிறது? என்னிடமுள்ள அன்பாகிய உணர்ச்சி எனக்கு பயனுள்ள ஒன்று. அதைக் கொஞ்சமும் யோசனை இல்லாமல் வீணாக்கிக் கொண்டிருக்க வேண்டுமா? என் அன்பு எனக்குக்கென்று சில கடமைகளை விதித்திருக்கின்றது. அக்கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு நான் தியாகங்கள் செய்ய தயாராக இருக்க வேண்டும். நான் யாரையாவது நேசிப்பதென்றால் அந்த ஆள் அதற்கு தகுதி பெற்றிருக்க வேண்டும். அந்த ஆளால் எனக்கென்ன லாபம் (ஆதாயம்) கிடைக்கும் என்பதை நான் இங்கு கணக்கிடுவதை தவீர்க்கிறேன். அத்துடன் என் காம உணர்ச்சியில் அந்த நபரின் இடம் என்ன என்பதையும் விட்டுவிடலாம்.
ஏனெனில் அயலானை நேசிக்கும் அறக்கோட்பாட்டிற்குள் மேற்கூறிய இரண்டு வகையான உறவுகளையும் பிரச்சனையாகக் கருதவில்லை. என் அயலானும் என்னைப் போன்ற கருத்துக்களை ஏற்றுக் கொண்டவனாக இருந்தால் என் நிழலின் மறுஉருவத்தை அவரிடம் காண்பேன். ஒருவகையில் அவரை நேசிப்பதன் மூலம் என்னையே நேசிப்பதாக இருக்கும். ஒருவேளை என்னை விட உத்தமனாகவும், அன்பாகவும் இருந்தால் அவர் மீது அன்பு செலுத்தலாம். அவருக்கு என் அன்பை பெறும் தகுதி இருக்கும். என் அயலான் எனக்குத் தெரிந்தவராக இருந்திருந்தால் அவரிடம் அன்பாக இருப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. முன்பின் தெரியாத அன்னியராக இருந்து அவரின் செயல்பாடுகள் என்னை கவர்ந்திட முடியாத நிலையில் இருந்தால் அவரை நேசிப்பது கடினமாக இருக்குமே. இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால் அவரை நேசிப்பது தவறானதாகும்.
என் அன்புக்குரிய மற்றோர் என்னை தவறாக கருத இடங்கொடுத்துவிடும். அவர்களுக்கு சமமாக இந்த அன்னிய நபரையும் மதிப்பது என்றால் என் பழைய நண்பர்களுக்கு நியாயமாக நான் நடப்பது போலாகாது. இன்னொரு விதத்தில் அண்டை வீட்டுக்காரர் இந்த பூமியில் வாழ்கின்ற ஓர் உயிர் பூச்சி, புழு, பாம்பு போல அவரும் ஒரு ஜந்து என்பதற்காகவே நான் அவர் மீது அன்பு காட்டலாம் தானே என்று சொன்னால் அவருக்கு என் மொத்த அன்பில் கோடியில் ஒரு பங்கு வேண்டுமானால் தரலாம். என் அன்பைக் கோடானு கோடி மண்ணுயிர்களுக்குப் பங்கு போடும் போது அண்டை வீட்டாருக்கு எவ்வளவு கிடைத்து விடப் போகிறது? என் விவேகத்தால் என்னை நான் எவ்வளவு தூரம் நேசிக்கின்றேனோ அதே அளவு அன்பை அந்த அயலாருக்குத் தருவதென்பது மிகவும் துர்தனமே!
என்னய்யா இது? அயலானை நேசி என்று இயேசு சொன்னதற்காகவா இந்த கிறுக்கன் இப்படி புலம்புகிறான். அன்பு என்பது அள்ள அள்ள குறையாதது. ஜீவனின் எல்லையில்லா ஊற்று அன்பு என்று ´டயலாக்´ சென்னால் அது என்ன லாஜீக்கோ? அதையே தான் எல்லா மதவாதிகளும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். ஆனால் யதார்த்தத்தில் நாம் காண்பது என்ன? அன்பு ஊற்றெடுக்கின்றதோ இல்லையோ வக்கனையாக எரிச்சல்களும், கோபங்களும், பொறாமையும் என ஒட்டு மொத்த அன்புக்கு எதிர்மறையான உணர்ச்சிகள் தாண்டவமாடுகின்றதே தவீர எங்கேயிருந்து பீய்த்துக் கொண்டு வருகின்றது அன்பு! ஆமாம் அதைத் தானே ஃப்ராய்டும் சொல்கிறார்:
'அடுத்த வீட்டு அயலானுக்கு என் மீது கொஞ்சமும் அன்பில்லாத போது, அவர் என்னை நேசிக்காத போது, நான் எப்படி அவரை நேசிக்க முடியும்? அவர் என்னை நேசிக்காத போது அவர் எனக்கு எந்தவிதத்திலாவது தீங்கிழைக்கவும் கூடும். அதனால் நான் அவரிடம் இருந்த எச்சரிக்கையாக ஒதுங்கி இருப்பது தானே நல்லது. என்னை பிடிக்காத காரணத்தினால் என்னை விமர்சிக்கலாம்; என்னை அவமதிக்கலாம்; அவதூறாக மற்றவரிடம் என்னைப் பற்றி பேசலாம். அல்லது அவர் செல்வந்தனாகவோ, அதிகாரமிக்க பொறுப்பில் இருந்தாலோ அவற்றை வைத்து என்னை இழிவாக நினைக்கலாம். அப்படிப்பட்ட அயலானை எப்படி நேசிக்க முடியும்?
"இந்த இந்த அறநெறிக் கோட்பாட்டின்படி நட என்று பரிந்துரை செய்ய வேண்டுமானால் அந்த கோட்பாட்டில் கொஞ்சம் நியாயம் இருக்க வேண்டும். பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத ஒரு அறநெறியைக் கடைப்பிடி என்று எதற்குச் சொல்லி வைத்தார்களோ தெரியவில்லை." அடுக்கடுக்காக கேள்விகளை வீசுகிறார் ஃப்ராய்டு.
இயேசு இருந்திருந்தால் "ஆளை விடப்பா, தெரியாமல் சொல்லித் தொலைத்து விட்டேன்" என்று எஸ்கேப் ஆகியிருப்பாரோ!
- தமிழச்சி 26/01/2009

அமீபாவில் தொடங்கி மிருகநிலையில் திரிந்த மனித சிந்தனைகளை நெறிப்படுத்திய சமயமும், தத்துவங்களும் மேற்கு ஐரோப்பியருக்கு இலட்சிய மனிதனின் உயர்ந்த நிலைப்பற்றி எடுத்துச் சொல்லி 200 ஆண்டுகள்தான் முடிந்திருக்கிறது.
கோடானகோடி மானிட வர்க்கத்தின் தொடர்ச்சியான மாற்றங்களோடு ஒப்பிடும் போது 200-ஆண்டுகள் குறுகியதுதான். ஆனால் அபாரமான பகுத்தறிவை மானிட வர்க்கத்தினருக்கு கொடுத்திருக்கிறது. "டாம் பெய்ன் (Tam Paine) என்ற சிந்தனையாளர் ஆங்கிலேய சமூதாயத்தில் இருந்த சாதி அடக்குமுறைக் கொடுமைகளையும், 'ஆதிப்பாவம்' என்னும் கிறிஸ்துவ மதக்கோட்பாடுகளையும் எதிர்க்க வைத்தது.
"நீக்ரோ இன மக்களைப் பிடித்து அமெரிக்காவில் விலைக்கு விற்ற 'அடிமைகள் வியாபார'த்தை ஜான் உல்மன் (Woolman) கண்டிக்க வைத்தது."
"படகோனியா பாலைவன மக்களின் கொடுமைகளுக்கு மனித நேய அடிப்படையில் தொண்டு செய்ய புறப்பட்டது ஜேசுசபை (The Society of Jesus)இந்நிகழ்வுகள் குறித்து பேராசிரியர் வொயிட்ஹெட் (Prof. Whitehead) சொல்கிறார் :
"ஜேசு சபையினரும், தத்துவ அறிஞர்களும் தங்களுக்குள் கருத்து வேற்றுமைகள் கொண்டிருந்தாலும் மனிதனைப் பற்றிய மதிப்பு உணர்வுகள் தத்துவத்தையும், சமயத்துறையையும் ஒன்றிணைத்தன. பத்தாம்பசலித்தன மூடத்தனங்களை தூக்கியெறிய வைத்து, ´ஜனநாயக சுதந்திரக் கொள்கை´க்குப் பெரிதும் ஊக்கமும், ஆக்கமும் கொடுக்க வைத்தது."
இப்படி உலக வரலாறுகளின் மானிட முன்னேற்றங்கள் சமூகப்பார்வையில் உயர்வு தாழ்வு பார்க்காமல் மனித மேம்பாட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தன.
வொயிட்ஹெட்டின் சமூகப்பார்வையும், தீவிர ஆராய்ச்சிகளும், ஒரு சில தனி மனிதர்களின் கடும் போராட்டங்களின் செயல்பாடுகளே, நெடிய மனித செயல்பாடுகளை புரட்டிபோட வைத்திருப்பதாக சொல்கிறார். அதே செயல்பாடுகள் நாம் வாழும் காலகட்டத்தில் எப்படி இருக்கின்றது என இன்றைய உலக நடப்புகளோடு ஒப்பிடும் போது இன்றைய ஜனநாயகப்போக்கும், மக்களாட்சி என்று மார்தட்டிக் கொள்பவர்களின் உண்மை நிலை என்ன?
ஒவ்வொரு மணிதனையும் ´Regimentation´ ஆக வைத்திருக்கும் அதிகாரத்தின் சூட்சமத்தை மனிதன் கண்டுபிடித்துவிட்டானா? சொந்த நாட்டில் அகதி வாழ்க்கை வாழும் தனிமனிதனின் சிந்தனை, நடத்தை, செயல்பாடுகள், சமூகப்பிடிப்பு, சுயகருத்துக்கள் கூட இன்று எங்கோ இருக்கும் ஒருசில தனிமனிதர்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நம்மை அறியாமல் நமக்குள் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாகரிகரிக மனிதனை விஞ்ஞான சாதனங்கள் மூலம் நம் மூளைக்குள் ஏதோ ஒருவித திணிப்பை அனுப்பிக் கொண்டிருக்கிறது. மக்கள் தொடர்பு சாதனங்களான பத்திரிக்கைகள், வானொலி, தொலைக்காட்சி, வீடியோ செய்திகளில் அப்பட்டமான பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. உக்கிரமான மானிட உரிமை மீறல் கருத்து திணிப்புகளை இப்படி எந்த காலகட்டத்திலும் நடந்ததில்லை.
சமூகப்பற்றுள்ள சில மனிதர்கள் இதை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். அவர்களுடைய எதிர்ப்பு குரல்கள் அதாவது பெருவாரியான மக்களின் கருத்தில் இருந்து தனித்து போனால் அவர்கள் வேண்டப்படாதவர்களாக போய்விடுகிறார்கள். புறக்கணிக்கப்பட்டவாக (Non Conformists) போய்விடுகிறான்.
சுயசிந்தனையும், மனசாட்சியும் உள்ள தனி மனிதன் வெகுவாரி சமூதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு தலைதூக்க முடியாதபடி அழுத்தப்படுகிறார்கள். ஏதோ ஒரு அதிகாரத்திற்கு விலைப்போனவர்களாக பொய்ப்பிரச்சாரத்தினால் மற்றவர்கள் நம்பும்படி சந்தேக நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
எல்லாக் காலகட்டங்களிலும் மாற்றுக் கருத்துகளுக்கு அங்கிகாரம் கிடைக்காமல் தனி மனித சிந்தனைகள் ஒடுக்கப்படும் போது இன்றை மனிதர்களை இன்னும் நாகரிகமடைந்தவனாக கருதமுடியாமல் இருக்கிறது. நாம் சந்திக்கும் மாற்றுக் கருத்தாளர்கள் எல்லாரும் அடக்குமுறையினால் சோர்வும் விரக்தியும் அடைந்த நிலையில் இருக்கிறார்கள்.
ஏதோ மக்களாட்சி நடக்கிறது; தனிமனிதனின் உணர்வுகள் மதிக்கப்படுகிறது; மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது; மாக்கள் மக்களாகி விட்டனர்; மானிட குலத்தின் சுதந்திரங்கள் போற்றி பாதுகாக்கப்படுகின்றன; சமத்துவ உரிமைகள் போற்றிப் பாதுகாக்க வல்லமை உடைய பல அமைப்புகள் சங்கங்கள் நமக்கு ஆதரவாக இருக்கின்றன என்றெல்லாம் கற்பனை போலித்தனத்தில் இருக்கின்றோமா என்னும் சந்தேகமும், பெரும் கவலையும் சமூகபற்றுவர்களுக்கு இன்று வந்திருக்கும் அளவு பல சூழ்ச்சிகள் உலகம் முழுவதிலும் நடக்கின்றன.
மீண்டும் மனிதனை மிருகநிலைக்கு கொண்டு சென்றுவிடும் அளவில் இன்றைய மனிதர்களின் வாழ்வாதார திண்டாட்டம் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. சரியான சமூகவழிதளத்தில் பயணிக்க போதிய விழிப்புணர்ச்சியை நமக்குள் ஏற்படுத்த வேண்டிய கடமை நமக்குள் இருக்கிறது.
ஒவ்வொரு தலைமுறையிலும் எழுச்சி பெறும் கோட்பாடுகளை அந்த காலகட்டத்துச் சமூதாயத் தேவைகளை வைத்தே மதிப்பீடு செய்ய வேண்டும் என்பது தானே வரலாற்று நியதி. அதை செய்வோமா?
- தமிழச்சி 27/05/2009
|