சாரு ஆன்லைன் - பெண்கள் ஜாக்கிரதை!

கோபமும், ஆவேசமும், அவமானமும், இயலாமையுமாக அப்பெண் பதிவர் எம்மை தொடர்பு கொண்டார். 21 வயதே உடைய சிறுபெண். கவிதை எழுதும் ஆர்வமும் புனைவுகளை பகிரும் தளமுமாகவும் தனக்காக ஒரு வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டு வீட்டுக்குள் முடங்கி கிடந்தாலும் இணையம் வாயிலாக உலகை வலம் வந்த சராசரி தமிழ் பெண். அவரது கவிதைகளையும் மற்ற படைப்புகளையும் குடும்பத்தினர் அனுமதி கொடுத்தால் மட்டுமே பிரசுரிக்கபடும் அளவே அவரது சுதந்திரம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நண்பர்களுக்காகவும் விவாதங்களில் கலந்து கொள்ளவும் புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பேஸ்புக் தளத்தையும் உபயோகத்தில் வைத்திருந்தார் அவர். அவையும் அவரது குடும்பத்தினரின் கண்காணிப்பிலேயே இருந்திருக்கிறது. இப்படி 6 மாதங்களாத்தான் இணையத்தின் மூலமாக வெளி உலக தொடர்புகளோடு இயங்கிக் கொண்டிருந்தார் அவர்.
நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், நிறைய வாசிக்க வேண்டும் என்ற அறிவுத் தேடலையும் குற்றமாக எந்த மனிதனாலும் கூற முடியாது. அந்த ஆர்வமே அப்பெண்ணிடம் மிகுதியாய் இருந்திருக்கிறது என்பதை அவருடன் பேசியதில் இருந்து உணர முடிகிறது. அப்படி இருக்க அவர் சந்தித்த பிரச்சனைதான் என்ன?
மீண்டும் படபடப்பாக பேச ஆரம்பிக்கிறார் அவர்.
"பேஸ்புக் வந்த பிறகு புதிய நட்புகளை ஏற்படுதிக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும் மிக கவனமாக நட்புகளை சேர்த்துக் கொள்வதில் ஆர்வமாய் இருந்தேன். கவிதைகளை தொடக்கத்தில் பேஸ்புக் பக்கத்தில் தான் எழுதிக் கொண்டிருந்தேன். விருப்பத் தேர்வுகளாக சிலரிடம் இருந்து கருத்துக்கள் வந்த போது மகிழ்சியாக இருந்தது. எனது கவிதை ஒன்று ஓர் வார இதழில் வெளிவந்த போது கவிதைகள் எழுதும் ஆர்வமும் தீவிரமானது.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பிரபல எழுத்தாளர்கள் கூட இருக்கிறார்கள் என்று முகவரிகளை கொடுத்தார். சில எழுத்தாளர்கள் தளத்தில் வாசகியாக இணைந்து கொண்டேன். அப்படித்தான் சாரு நிவேதிதா வாசகர் குழுவில் இணைந்தேன். ஆனால் சாருநிவேதிதா படைப்புகள் எதையும் நான் வாசித்திருக்கவில்லை. இணையம் மூலமாகவே அவருடைய பெயர் பரிச்சியம் ஏற்பட்ட பின் அவரது வாசகர் வட்டத்தில் இணைந்தேன்.
முதன் முறையாக அவருடன் சாட் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. தொடக்க நிலையில் மரியாதையாகத் தான் பேசினார். சில நாட்களுக்கு பின் அவருடைய புத்தகங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவரிடம், "உங்கள் புத்தகம் எதையும் வாசித்ததில்லை" என்றேன். உடனே அவருடைய இணையதள முகவரியை கொடுத்தார். வீட்டு முகவரி கொடுத்தால் புத்தகம் அனுப்புவதாக கூறினார். சிறிது தயக்கமாய் இருந்தாலும் பிரபலமான ஒருவர் கேட்கிறாரே என்று வீட்டு விலாசத்தை கொடுத்தேன். கூடிய சீக்கிரம் புத்தகம் அனுப்புவதாக கூறினார். மேலும் சில நாட்களுக்கு பின் மிக உரிமையாக பேச ஆரம்பித்தார். 'செல்லம்', 'கண்ணு', 'புஜ்ஜி', 'வாடா', 'போடா' என ஆரம்பித்த போது மிகுந்த சங்கடமாக எனக்கு இருந்தாலும் எனது அப்பா வயதுடையவராக கருதியதால் ஏதோ அன்பாக பேசுகிறார் என்று பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் சில நாட்களில் எனது கவிதைகள் குறித்து பாராட்டு தெரிவித்தார். அதனால் மேலும் நான் எழுதி இருந்த கவிதைகளை ஆர்வமாக அவருக்கு அனுப்பினேன். வாசித்துவிட்டு அருமையாக இருப்பதாக பாராட்டினார். என்னை குறித்து அவரது தளத்திலும் ஓர் கட்டுரை எழுதினார். இதன் தாக்கம் பின்னாலில் எப்படி இருக்கும் என்பதை அப்போது நான் உணரவில்லை.
அதற்கு பின் அவரோடு சாட் செய்த போது ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேச ஆரம்பித்தார். அதிர்ச்சியடைந்த நான் எப்படி சொல்வதென்று தெரியாமல் பயந்தேன். என்னுடைய சுபாவம் எனக்கு எடுத்தெரிந்து பேசும் தைரியத்தை கொடுக்கவில்லை. ஆனால் சில நண்பர்களிடம் இது குறித்து கூறினேன். பிறகுதான் சாருவின் படைப்புகள் குறித்தும் அவருடைய நடத்தைகள் குறித்தும் சில நண்பர்கள் எச்சரிக்கை செய்தார்கள். நான் தவறான இடத்தில் இருப்பதாக தோன்றியது. மேலும் சாரு நிவேதிதாவின் வாசகர் பேஜ் பக்கத்தில் நடக்கும் விவாதங்கள் ஆபாசமானதாகவும் இருந்ததால் இதில் இருந்து விலகி விட வேண்டும் என்று தோன்றியது. அதனால் சாட் மற்றும் வாசகர் வட்டத்தில் இருந்தும் விலகிக் கொண்டேன். இத்தோடு சாருவும் நிறுத்தி இருந்திருக்கலாம். ஆனால் பேஸ்புக் பகுதியில் என்னை குறித்து நேரடியாக எழுதிய சில கருத்துக்களால் மனவுளைச்சல் ஏற்பட்டது. அவருடைய சில வாசகர்களும் மறைமுகமாய் என்னை தாக்கி எழுதினார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இணையத் தொடர்புகளில் இருந்து விலகி விடலாமா? என்று தோன்றியது.
சாரு வாசகர்களின் மறைமுகத் தாக்குதல்களையும் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சில நண்பர்கள், 'இத்தோடு விட்டுவிடு. பிரச்சனையை வெளியே சொல்லாதே' என்கிறார்கள். என்னால் முடியவில்லை. ஏன் இப்படி? நான் என்ன தவறு செய்தேன்? எந்த குற்றமும் செய்யாத நான் ஏன் குற்றவுணர்ச்சியோடு இருக்க வேண்டும். இதற்கான பதில் தான் தற்போதைய தேடலாய் எனக்குள் இருக்கிறது. இனி நான் என்ன செய்வது? நீங்களே கூறுங்கள்" என்று நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறார்.
அவரின் தகவல்களை உறுதிபடுத்தும் நோக்கத்தோடு ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தோம். முதலாவதாக சாருவுடன் செய்த சாட் அனைத்தையும் நிதானமாய் வாசித்தோம்.
மே மாதம் 22.05.2011- இல் சாட் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் வாசகர்களில் ஒருவர் என்ற அறிமுகத்துடன் பெண் பதிவரின் அறிமுகம் செல்கிறது. சில நாட்கள் சாதாரண நலன் விசாரிப்புகளுடனே சாட் தகவல்கள் உள்ளன. மே 31-இல் சாருவின் அணுகுமுறை மாறி இருக்கிறது. 'நீங்கள்' என்கிற வார்த்தையில் இருந்து டா, செல்லம், கண்ணு போன்ற சொல்லாடல்களை உபயோகித்திருக்கிறார். உரையாடலில் பெண் பதிவரின் சங்கடப்படும் தொனிகள் தென்படுகின்றன. அதன் பின் ஜீன் 02.06.2011 அன்று நடைபெற்ற சாட்டில், "கனிமொழியிடம் (முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்) இருந்த காதலுக்கு பின் இப்போதுதான் உன்னைப் பார்க்கும் போது காதல் வருகிறது என்று குறிப்பிடுகிறார். அப்போது இப்பெண் பதிவரின் பதிலில் அதிருப்தியை பார்க்கிறோம். தன்னை வாசகியாகவே முன்னிருத்தி உரையாடலை முடிக்கிறார். அதற்கு பின் ஜீன் 12.06.2011 அன்று நடைப்பெற்ற சாட் உரையாடலில் சாரு மிக மோசமான பாலியல் கிளர்ச்சி வார்த்தைகளை உபயோகித்தது காணப்படுகிறது. அதில் சில வாசகர்களின் பார்வைக்கு.
Dim lights Embed Embed this video on your site
இவ்உரையாடலின் போதே தனது நண்பர்கள் பட்டிலில் இருந்து சாருவை நீக்கியதோடு வாசகர் குழுவில் இருந்தும் நீங்கிக் கொள்கிறார். ஆனால் சாரு அதே தேதியில் (ஜூன் 12) தனது வாசகர் பக்கத்தில் இப்பெண்ணை கேவலப்படுத்தி ஆண்மையத் திமிரோடு எழுதுகிறார்.

மேற்குறிப்பிட்ட சாருவின் அயோக்கியத்தனமான பதிலை பாருங்கள். 23 நாட்கள் வாசகர் வட்டத்தில் இணைந்து, 13 முறை சாட் செய்து பேசிய பெண்ணை, 'தனது நோக்கத்திற்கு இணங்கவில்லை என்றதும், அவள் நட்பு வட்டத்தில் இருந்து விலகி விட்டாள் என்பதை அறிந்ததும் சாட்டுக்குள் நடத்திய ரவுசுளை மறந்துவிட்டு, யோக்கியவான் பொங்கி எழுந்து வாசகர்கள் மத்தியில் 'போதனை' செய்கிறார். இந்த அயோக்கியனின் யோக்கியதை 'மைனர் குஞ்சு' ரேஞ்சுக்கு இருக்க, பாதிக்கப்பட்ட பெண் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதும், இணையத்தில் இருந்து விலகிக் கொள்வதும்தான் நியாயமான செயலா? வாசகியாக அறிமுகமாகும் பெண்களிடம் சாட்டுக்குள்ளும், போனிலும் 'காமரசம்' போதிப்பதும், பாலியல் கிளர்ச்சியில் உளறுவதும்தான் சாருவின் யோக்கியதை என்றால் சாருவின் வாசகர்கள் அந்த கருமத்தை நியாயப்படுத்த முயல்வீர்களா?
இச் சம்பவத்தை முன்வைத்து சாருவுக்காக வக்காலத்து வாங்க வருபவர்கள் தங்கள் அம்மா, மனைவி, மகள்களை சாருவின் ஆன்லைனில் விட்டுவிட்டு பஞ்சாயத்துக்கு இங்கே வாருங்கள்! காத்திருக்கிறோம்!
தமிழச்சி
20.06.2011
பதிவுகள் தேதி வாரியாக
- ► December (4)
- ► November (1)
-
►
October
(84)
- எதற்காக பிறந்தநாள் விழா கொண்டாட்டம்?
- ´சே´வுக்கு செவ்வணக்கம்
- கருத்து முதல்வாதமும், பொருள் முதல்வாதமும்.
- ஒரு தத்துவ வரலாறு தொடக்கத்தில்...
- ஆசிரியர் தினத்தில் சிந்திக்க ஒரு கருத்து...
- மர்மங்களால் பிணைக்கப்பட்டிருப்பது மனிதனா? அவன் சிந்தனையா?
- வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும்.
- நவராத்திரி!
- தீபாவளி!
- துன்பம் தரும் தீபாவளி
- தீபாவளி குறித்து 1929-இல் பெரியார் கூறியவை
- தீபாவளி குறித்து..
- நரகாசுரன்
- அநீதிகளுக்கெதிரான போராளி முத்துக்குமாரன்!
- யோனிகளை ஏன் வெடி வைத்து சிதறடிக்க வேண்டும்?
- வாழ்க்கை மகத்தானது!
- காதல்மணம்!
- காதலோ காதல்! "உண்மைக் காதல்"!!
- ´பர்தா´வை கொளுத்துவேன்!
- நாக்க "மு.க" வேஷங்கட்டி கூத்துக்கட்டறான்...
- பொய் முகங்கள்..!
- பந்தயம் கட்டிக் கேட்கிறேன்!
- நித்தியானந்த சாமியாரின் செக்ஸ் காட்சிகள். தமிழ்நாட்டில் பரபரப்பு!
- "ஜாலி ஜாலி"யென நீ இருந்தால்...
- பெண் ஏன் இப்படியானாள்?
- பெண்கள் சீரழிய காரணங்கள்!
- சமூகத்தின் மதிப்பிடு அறநெறியில்..!
- ஒன்றுக்கும் அஞ்சாதீர்!
- பேசுவதால் என்ன பிரச்சனை?
- விக்டோர் உய்கோ..
- தமிழக ரௌடிகளின் அராஜகமும், அரசு ஆதரவும்
- வணிக நோக்கமற்ற மனித நேய முயற்சியை முன் வைத்து...
- கலைக்குரிய இலட்சணம் இருக்கிறதா?
- அதிகப் பிரசங்கித்தனத்தால் கொள்கைகள் அபத்தமாகிவிடக் கூடாது!
- புஸ்தகங்களைக் கொளுத்தும் கிளர்ச்சி!
- சினிமா!
- இளைஞர்களுக்குப் பெரியார் அறிவுரை!
- தோட்டியும், மலக்குழியும்!
- இனவெறியின் வீழ்ச்சி எப்போது?
- மூலத்துடன் தொடர்பு!
- நரகத்தில் ஓர் வாசகம்!
- இன்றைய சமூக கட்டமைப்பிலும் மனிதன் அடிமையே!
- இந்தியாவில் தொழிலாளர் நிலை குறித்து பெரியாரின் கேள்வி!
- "அயலானை நேசி" என்ற வெத்து வாதம்
- முதல் விந்திலேயே தொடங்கி விடுகிறதா தற்கொலை எண்ணம்?
- வேசிக்கும், திருடனுக்கும் உள்ள உறவைப் போன்றது தி.மு.க - குஷ்பு கூட்டணி!
- "எப்பொழுதுமே ஒரு போராட்டத்தில் ஈடுபட்டு இரு!
- கலப்பு திருமணத்தை காந்தி ஏன் ஆதரிக்கவில்லை?
- அரசியலில் கோவணம் கட்டத்தெரியாது தி.மு.க திரிந்த காலமும் இன்றைய தி.மு.க வின் வளர்ச்சியும்...
- "1925 முதல் 1938 முடிய / தோழர் வீரமணி அவர்களிடமிருந்து விடுதலை பெற்ற குடி அரசு இதழ்கள் / 28 தொகுப்புக்கள்"
- ஆக்கிரமிப்பு குணம்!
- கலகமும், புரட்சியும், சமதர்மமும்.
- "நாம் தமிழர்" கட்சிக்காரர்கள் - பொறுக்கித் தின்னும் கூட்டம்!
- பிரான்சில் பர்தா அணியத் தடை!
- வாணரங்கள் ஆட்சி செய்யும் தமிழகத்தில்....
- அரசியல் நையாண்டி!
- “உனது வழி செல், பேசுவோர் பேசட்டும்"
- யார் இந்த ஜகத் கஸ்பர்? - ´சவுக்கு´ அம்பலப்படுத்துகிறார்!
- செம்மொழி மாநாடு - கருணாநிதி குடும்பம் ஆட்டைய போட்ட தொகை எவ்வளவு?
- தி.மு.க முன்னேற்றக் கழகமா? பின்னேற்றக் கழகமா?
- பெரியாரின் தி.மு.க குறித்த நையாண்டி!
- கருணாநிதி அரசின் மக்கள் விரோதப்போக்கு – எழுச்சிக் கூட்டம் : கருத்துரிமைக்கான கூட்டமைப்பு
- தலிபான் தீர்ப்புகள்!
- பெரியாரை கேவலப்படுத்தும் வீரமணி&கோ
- கருக்கிய நாளிலேயே கருக்கொள்கிறோம்!
- ஆகா... இப்படியுமா?
- கலைஞரின் வாரிசு தத்துவங்கள்...
- அக்.2 போராட்டம்: ஓர் உரிமையான வேண்டுகோள்!
- ரம்லத், பிரபுதேவா, நயன்தாரா..
- அவமானம் என்பது மூலதனம் எமக்கு!
- அயோத்தியின் தீர்ப்பில் அயோக்கியத்தனம்.
- தீண்டாமைக்கு எதிராக போராடிய பெரியார் தொண்டர்கள் 3000 ஆயிரம் பேர் கைது!
- ´இந்து லா´ வுக்கு பாராட்டு விழா...
- கலைஞர் ஆஸ்திகனா? திருடனா?
- சீரமைக்கப்பட்ட ஆயிஷா...
- ஆயுத பூஜைக்குள் கலகம்
- தேவை சில பெண் போராளிகள்...
- தேசத் துரோகியாகிறார் அருந்ததி ராய்!
- அண்ணன் ஜட்டியை கழட்ட சொன்னாங்க...
- நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!
- மாமனிதர்களின் அந்தரங்கம்..!
- வெளிவருகிறான் கலகக்காரன்
- குழந்தைகள் தினமும் போலி அக்கறைகளும்..
- மாண்புமிக்க பண்புக்கு இலக்கணம் கொடுக்கும் மானமிகு...
- ► September (4)
- ► August (3)
- ► July (6)
- ► June (9)
- ► May (7)
- ► April (5)
- ► March (7)
- ► February (7)
- ► January (9)
-
►
December
(11)
- சீமான் கேடுகெட்ட பிழைப்புவாதி!
- சாதியை மற..
- அறிவிலிகள் கேட்கிறார்கள்...
- தோழர் பெரியார் நினைவுநாள்!
- தோழர் பெரியார் நினைவுநாள்!
- சறுக்குது பெரியார் முழக்கம்...
- தமிழ் தேசியம் பேசும் இன்றைய பார்ப்பனிய கைக்கூலிகளுக்காக..
- சாதித்தோல்...
- ´லைஸிஸ்ட்ராட்டா´
- டாக்டர் ´பாபாசாஹேப் அம்பேத்கர்´ - தீண்டாமையின் அடையாளமா?
- கணக்கு காட்டுகிறேன் கண்ணுடையோர் காண
- ► November (6)
- ► September (1)
- ► August (1)
- ► May (1)
- ► April (1)
- ► February (1)
- ► January (1)





Comments
இந்த பெண் தன் குடும்பத்தை மீறி செயல்பட முடியாது சரி ஆனால் இந்த நாயிடம் ஏமாந்த எத்தனையோ பேர் இருப்பார்களே அவர்களில் யாரையாவது வைத்து சைபர் கிரைமில் புகார் செய்யலாமே??
Done miss madam .
Also change Youtube File name to english
பெரிய மனிதன் போர்வையில் ஒரு காம பிசாசு!
பெண்கள் ஜாக்கிரதை!
please remove word verification from blog settings
hey i dont think he has one.
ஒரு சொலவடைதான் ஞாபகத்திற்கு வருது
“”””கொலைக்கிற நாய் கடிக்காது””””””
அவரால முடியாதுன்னு நினைக்கிறேன். அதனால அவரு மனசு வக்கிரமடைந்து விட்டது. இந்த வயசுல இது ரொம்ப சீரியஸ்கேஸ். அவரு ஒடனே மருத்துவர ச்ந்திக்கிறதுதா ன் நல்லது.
இப்டி நான் பேசனதுக்கு அவர பத்தி பேசாம அவுரு பொண்ண பத்தி ஏன் பேசற? ன்னு பொங்கி எழும் எல்லாருக்கும் நான் ஒன்னு சொல்லிக்கரன் அந்தாளு பேத்தி வயசுல இருக்கற பொண்ணுகிட்ட அவருஅப்படியெல்ல ாம் பேசறது சரின்னா, நான் அவரு பொண்ணு அப்டி பேசறதும் எந்த வித்துலயும் தப்பு இல்ல.
இணைய நண்பர்கள் சார்பாக முதலில் நன்றி நவில்கிறேன்
அக்காலத்தில் புலியை முறத்தால் அடித்தவள் நம் தமிழச்சி
இக்காலத்தில் பசுதோல் போர்த்திய கரும் (கரும) புலியை (சா.நி) தைரியத்தால் அடித்தவள் இந்த தமிழச்சி
இணையத்தில் இணைந்திருக்கும் தமிழர்கள் அனைவர்க்கும் ஓர் வேண்டுகோள்
இந்த தமிழச்சியை இன்று நாம் ஆதரிக்கவிட்டால் அந்த ஆண்டவனால் கூட நம்மை காப்பாற்ற முடியாது.
உங்களுடைய இந்த சமுக விழிப்புணர்வு போராட்டத்திற்கு என்னுடைய தார்மிக ஆதரவு என்றும் உண்டு. சாரு செய்தது மன்னிக்க முடியாதது மட்டுமல்ல, தண்டிக்க வேண்டியதும்கூட. தாங்கள் ஒரு பெரியாரியவாதியெ ன்று அறிகிறேன். வாழ்த்துகள்.
அதை படித்த பிறகுதான் இது உண்மையா பொய்யா என்ற கேள்வி எழுகிறது?
To be honest, I am not a big fan your writing but what you have done now is absolutely marvellous. These kind of self-indulgent bas**ds need to be lynched who scare away few Tamil women who come into outside world. His action not only affects the girl concerned but all other girls who want to come into the web/literary world.
You did the right thing by exposing him. Thank you
தனது மனைவி அவந்திகாவினை முத்தமிட்டதில்ல ை என்ற சாருவின் சாட் கருத்தைப் படிக்கும்போது, "நீயா நானா"வில் இதே சாருநிவெதிதா, தனது மனைவியை, கடற்கரையில் வைத்து(பொது இடத்தில்) முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தியத ைப் பற்றி கூறி, அதைப் பற்றி கடுமையாக வாதிட்ட சம்பவம் நினைவுக்கு வருகிறது! ம் ம் ம்!
பலம் ஆனவன் இந்தப் பொறுக்கி.
இந்தச் செய்தி அந்த இதழ்களில் வெளியாகி, அத்தனை தமிழ் வாசகர்களும் இவன் யோக்கி யதையைத் தெரிந்துகொண்டு காரித் துப்ப வேண்டும்.
இவனைப் பற்றிய இந்தச் செய்தி அந்த இதழ்களில் வெளி வர வேண்டும்.
தமிழ் வாசகர்கள் இவன் மீது காரித் துப்ப வேண்டும்.
ஆண்களில் பெரும்பான்மையின ர் வாய்ப்புக்கிடைக ்கும் வரை யோக்கியர்களாக வேடம்போடுவார்கள ்.ஆனால் சாரு போன்றவர்கள் வாய்ப்பை உருவாக்க எந்த அளவிற்கும் போவார்கள்.இவர் போன்ற ஆட்கள் நிறைய பேர் நாட்டில் இருக்கிறார்கள்.இந்த விசயத்தில் இவர் பேர் ரிப்பேர் ஆவது பற்றி அப்படி ஒன்றும் கவலைப்பட மாட்டார்.இரண்டு நாளைக்கு சரக்கு நல்லா அடிச்சிட்டு அடுத்த வலைய வீச போய்டுவாங்க.வெகுசன இதழ்களில் இந்த செய்தி வந்தால் நன்று.
RSS feed for comments to this post